மத்திய கல்லூரி அதிபர் விவகாரம்  தகுதியான அதிபர் பக்கமே நான் – அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் பழைய மாணவன் என்ற நீதியில் கல்லூரியின்  தகுதியான அதிபர் பக்கமே நான் நிற்பேன் என கடற்தொழில் அமைச்சரும் மத்திய கல்லூரியின் பழைய மாணவனுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமூக பாதுகாப்பு சபையின்... Read more »

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இன்று இந்தியாவால் காலமானார். w இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான... Read more »

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம் – வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை 

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, விபத்துடன் தொடர்புடைய... Read more »

கல்விசார பணியாளர்களைப் பாதிக்கும் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு கண்டு மாணவர்களின் கல்வியை உறுதி செய்க – யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் 

கல்விசார பணியாளர்களைப் பாதிக்கும் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு கண்டு மாணவர்களின் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின்... Read more »

ஒன்றுக்கு மேற்பட்ட தடவை எல்லை தாண்டி வந்தால் அவர்களுக்கு சிறை – டக்ளஸ் உறுதி

2018ஆம் ஆண்டு அரசியல் யாப்பு சட்டத்தில், முதற்தடவையாக எல்லை தாண்டி வந்தால் அவர்களுக்கு பிணை வழங்க முடியும் என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட தடவை எல்லை தாண்டி வரும்போது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் சிறை வைக்கப்பட்டமைக்கு... Read more »

யாழ்ப்பாணம் – மாதகல் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை

யாழ்ப்பாணம் – மாதகல் சம்பில்துறை விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட வேண்டாம்... Read more »

அமைச்சுப் பதவியை துறக்க தயார்-டக்ளஸ் அதிரடி அறிவிப்பு

மீனவர் பிரச்சனை குறித்து இந்திய தரப்பிலிருந்து  இலங்கை அரசாங்கத்தின் மீது தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமாயின்  எனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து விட்டு மீனவ மக்களுடன் இணைந்து கடலில் போராடுவேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்  இன்றைய தினம்(27)  இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து... Read more »

சனல் 4 குற்றச்சாட்டு: விசாரணைகளுக்கு என்ன ஆனது? ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 சுமத்திய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னேற்றம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரியுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எப்போது நாடாளுமன்றுக்கும் மக்களுக்கும் கிடைக்கும் என்பதை... Read more »

திருமணமான சில மாதங்களில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

நேற்று முன்தினம் (25) தவறான முடிவெடுத்து ஆணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவாயநம சுயாஸ்கரன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்ற நிலையில் தற்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.... Read more »

நீர் வெறுப்பு நோய்க்கு உள்ளாகி யாழ்ப்பாணத்தில் இளைஞர் உயிரிழப்பு!

மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். மணற்பகுதி ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பிரதாபன் சாலமன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் 25ஆம்... Read more »