அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்கியிருந்து கல்வி கற்ற சிறுமி காணாமல் போயுள்ள நிலையில் சிறுமியைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமி பலியல்; துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில்... Read more »
உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் அரசினால் வழங்கப்படும் நிவாரண கொடுப்பனவு இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் இரண்டு சமுர்த்தி வங்கிகளில் இடம்பெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் ஆலையடிவேம்பு வடக்கு மற்றும் தெற்கு வங்கிகளின் சமுர்த்தி வங்கி ஊடாக வழங்கப்பட்ட நிவாரண... Read more »
நாட்டில் எற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி குடும்பங்களுக்கு உலக வங்கியின் நிதியுதவியுடன் வாழ்வாதார மானிய உதவிப் பணம் இன்று வழங்கப்பட்டன. திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சமூர்த்தி வங்கி கிளையின் முகாமையாளர் திருமதி நிஷாந்தி தயானந்தன் தலைமையில் தம்பிலுவில் சமூர்த்தி... Read more »
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேச மக்களுக்கு காரைதீவு 24ஆம் படையனியின் ஏற்பாட்டில் இன்று பாதிக்கபட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் வழங்கப்பட்டன. சிங்கப்பூர் நிறுவனத்தின் அனுசரனையில் இன்று காரைதீவு பிரதேச செயலகத்திங்குட்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்... Read more »
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நேற்று மாலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை... Read more »
ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை உள்ளிட்ட முக்கிய வாஸ்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள், போராட்டக்காரர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படும் கொழும்பின் முக்கிய பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more »
கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 30 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. Read more »
போலி கடவுச்சீட்டு வழக்கில் சசி வீரவங்ச தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சிச வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே குறித்த தீர்மானத்தை நீதிமன்றம் அறிவித்தது. போலி ஆவணங்களை... Read more »
நேபாளத்தில் 22 பேருடன் மாயமான விமானம் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தைக் கண்டுபிடித்த மீட்புக் குழுவினர், இதுவரை 14 சடலங்களை மீட்டுள்ளனர். விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளன. விபத்து நடந்த பகுதியில் இருந்து இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.... Read more »
நாட்டின் 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணிவரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு சற்று... Read more »