காரைதீவில் பாதிக்கபட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேச மக்களுக்கு காரைதீவு 24ஆம் படையனியின் ஏற்பாட்டில் இன்று பாதிக்கபட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் வழங்கப்பட்டன.

சிங்கப்பூர் நிறுவனத்தின் அனுசரனையில் இன்று காரைதீவு பிரதேச செயலகத்திங்குட்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

65 இலட்சம் பெறுமதியான உணவுப் பொதிகள் 42,500 பேருக்கு வழங்கும் நிகழ்வில் முதல் கட்டமாக இன்று காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட படையணிப் பொறுப்பதிகாரி காரைதீவு 24ஆம் படையணிப் பொறுப்பதிகாரி மூவின மதகுருமார்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews