ஆலையடிவேம்பு சமுர்த்தி வங்கிகளில் வாழ்வாதார நிதியுதவி வழங்கல்

உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் அரசினால் வழங்கப்படும் நிவாரண கொடுப்பனவு இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் இரண்டு சமுர்த்தி வங்கிகளில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் ஆலையடிவேம்பு வடக்கு மற்றும் தெற்கு வங்கிகளின் சமுர்த்தி வங்கி ஊடாக வழங்கப்பட்ட நிவாரண கொடுப்பனவு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இரு வங்கிகளினதும் முகாமையாளர்களான கே.சுரேஸ்குமார் மற்றும் கவிதா ஆகியோரின் தலைமைகளில் இடம்பெற்ற நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் மற்றும் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் உள்ளிட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

பொருளாதார நிலை காரணமாக மக்கள் அன்றாட தொழிலை இழந்துள்ள இந்நிலையில் மக்களது அன்றாட தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யும் வகையில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews