அபாய கட்டத்தில் திருச்சி முகாமில் உள்ள ஈழ தமிழ் உறுவுகள்…..!

திருச்சி தமிழ்நாடு சிறப்பு முகாமில் தடுத்து  வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய கோரி இன்று 17 ஆவது நாளாக நீரை மட்டும் அருந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்றைய தினம் திருச்சி சிறப்பு முகாமில் இருக்கக்கூடிய  104  ஈழத்தமிழர்களும், தங்களை ... Read more »

அஹகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலி.

அஹங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகர்களிடையே இடம்பெற்ற முரண்பாட்டின் காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என... Read more »

வடமராட்சியில் கஞ்சாவுடன் 3 பேர் கைது.

யாழ்.வடமராட்சி திக்கம் பகுதியில் 1கிலோ 900கிராம் கஞ்சாவுடன் மூவர் இன்று வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி, திக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினர் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில்... Read more »

கிளிநொச்சியில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.

கிளிநொச்சி – பரந்தன் a-9 வீதியில் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி, பரந்தன் ஏ9 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் இன்றிரவு குற்றுயிராக கிடந்த ஒருவரை அவதானித்த கடை உரிமையாளர் ஒருவர் 1990 அவசர ஆம்புலன்ஸ்... Read more »

வவுனிக்குளம் மீனவர்களின் வலைகள் மற்றும் துடுப்புகள் சேதம்.

முல்லைத்தீவு – வவுனிக்குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் அம்பாள்புரம் கிராம மீனவர்களின் வலைகள் மற்றும் துடுப்புகள் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களினால் அறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் தொழில் முடித்து வீடு திரும்பிய நிலையில் மறுநாள் வலைகள் அறுக்கப்பட்டு, படகுகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள்... Read more »

அனலைதீவு பகுதியில் மனித எலும்புக்கூடு மீட்பு.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அனலைதீவுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் மனித எலும்புக்கூடு ஒன்று கரையொதுங்கியுள்ளது. அனலைதீவின் வெளிச்சவீட்டுப் பகுதியிலேயே குறித்த எச்சங்கள் கரையொதுங்கியுள்ளன. இவ்வாறு கரையொதுங்கியுள்ள எலும்புக்கூடு நீண்ட காலத்துக்கு முற்பட்டதாக  இருக்கலாம் என்று மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனிடையே பிந்திய... Read more »

கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை.

கிளிநொச்சி மருதநகர் பகுதியில்  ஒன்றரை வயது குழந்தையொன்று வீட்டின் முன் உள்ள வாய்க்காலில் விழுந்து பலியாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இச்சம்பவமானது நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் முன் பகுதியில் உள்ள வாய்க்காலில் குழந்தை தவறி விழுந்துள்ளது.... Read more »

நாட்டை முன்னேற்ற இதுவே ஒரே வழி – நாமல் ராஜபக்ச.

முன்னோடியான கலந்துரையாடல் மேற்கொண்டு புரிந்துணர்வை ஏற்படுத்தி முன்னேறுவதே நாட்டை முன்னோக்கி செல்ல ஒரே வழி என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர், அனைவரையும் ஒன்றிணைத்து இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் பணியாற்றுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.... Read more »

பசில் ராஜபக்சவின் யோசனைகளை இடைநிறுத்த நிதி அமைச்சு முடிவு.

பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக இருந்த காலத்தில் முன்வைத்த இரண்டு யோசனைகள் நிதி அமைச்சினால் இடைநிறுத்தப்படவுள்ளன. 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச முன்வைத்த யோசனைகளை இடைநிறுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 4917 உள்ளூராட்சிப் பிரிவுகளுக்கு தலா 4... Read more »

நாடு பஞ்சத்தை நோக்கி நகர்கிறது: விவசாயிகள் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும்- சட்டத்தரணி சுவஸ்திகா.

நாடு பஞ்சத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகள் கமம் செய்வதை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என்று சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(4) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read more »