வடக்கு கிழக்கு மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்தியாவில் இருந்து மண்ணெண்ணை! இந்திய தூதரகம்நடவடிக்கை. –

வடக்கு கிழக்கு மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையின் பெயரில் இந்தியாவில் இருந்து மண்ணெண்ணை எடுத்து வரும் ஏற்பாட்டில் இந்தியத் தூதரகம் மேற்கொண்டுள்ளது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி நிலைமயினால் மண்ணெண்ணை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில்  மீனவர்களும், விவசாயிகளும், தற்போது 400 ரூபாவிற்கு கள்ளச்... Read more »

பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பம்! –

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த... Read more »

மிருசுவில் பெண் மீது வாள்வெட்டு, இரண்டு ஆண்டுகளின் பின் கைது…..!

மிருசுவிலில் பெண் ஒருவரை வாளினால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் 2 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட பணத்துக்காக அந்தப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்... Read more »

பாடசாலை வாகனங்களுக்கு இதுவரை டீசல் விநியோகிக்கப்படவில்லை- ஆனந்த பாலித்த –

இன்று திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எனினும் பாடசாலைக்கு செல்வதற்கான பாடசாலை வான்கள், பஸ்களுக்கு தற்போதுவரை டீசலை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(5) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர்... Read more »

பொன் சிவகுமாரனுக்கு கரைச்சி பிரதேச சபையினராலும் நேற்று  அஞ்சலி

தியாகி  பொன் சிவகுமாரனுக்கு கரைச்சி பிரதேச சபையினராலும் நேற்று  அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் உரும்பிராயில்  அமைந்துள்ள அவரது சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு விளக்கேற்றி அஞ்சலிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று காலை 11.30 மணியளவில் இடம் பெற்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் மற்றும்... Read more »

தியாகி பொன் சிவகுமாரனிற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அஞ்சலி! –

தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலும் இடம்பெற்றது. உரும்பிராயில் உள்ள நினைவுத் தூபியில் இன்று மதியம் 12 மணிக்கு, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற பின்னர், பொன்.சிவகுமாரின் கல்லறையிலும் தமிழ்த் தேசிய... Read more »

பொன் சிவகுமாரனின் நினைவுதினம் யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

தியாகி பொன் சிவகுமாரனின் நாற்பத்தி எட்டாவது நினைவுதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை 4 மணியளவில் கைலாசபதி கலையரங்கின் முன்பாக மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தற்கொடையாளர் பொன் சிவகுமாரனின் நினைவுப் பகிர்வு மாணவர்களால் முன்னெடுக்க பட்டதோடு பொன் சிவகுமாரன் உருவப்படத்திற்கு ஈகைச் சுடர்... Read more »

சிவசிதம்பரத்தின் 20 வது நினைவேந்தல் நேற்று இடம் பெற்றது…..!

தமிழர்களின் மாபெரும் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவரும், ‘உடுப்பிட்டி சிங்கம்’ என புகழப்பட்டவருமான அமரர் மு. சிவசிதம்பரத்தின் (நல்லூர் சிவா) 20 ஆவது நினைவு தினம் நேற்றாகும். சிம்மக் குரலோன்’ எனவும் ‘உடுப்பிட்டி சிங்கம்’ எனவும் ‘தலைவர் சிவா’ கொள்கைப் பற்றுடன் இறுதி வரை வாழ்ந்த... Read more »

கவலைக்கிடமான நிலையிலிருந்த 17 உணணாவிரதிகளும் திருச்சி மருத்துவ மனையில்  சிகிச்சை ……!

இந்திய தமிழ் நாடு திருச்சி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் சிறப்பு முகாமில் கடந்த 17 நாட்களாக தம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்யுங்கள் என நீரை மட்டும் அருந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஈழத் தமிழ் அகதிகள்... Read more »

உயிர்வாழ பயிரிடுவோம் செயற்றிட்டம் உரும்பிராயில் ஆரம்பித்துவைப்பு…..! சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பிரதேச சபையுடன் இணைந்து தொடங்கியது.

சமூக விஞ்ஞான ஆய்வு மையமும் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளரும் இணைந்து பயிரிடுவோம் உயிர்வாழ்வோம் எனும் திட்டத்தை வலி கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட உரும்பிராய் கிழக்கில் நேற்று பிற்பகல்  5:00 மணியளவில் தொடக்கி  வைத்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஏற்படக்... Read more »