இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைதது செய்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரும் 65 வயது நபர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 42 லீற்றர் 750 மில்லிலீற்றர் பெற்றோல், 28 லீற்றர் 500 மில்லிலீற்றர்... Read more »
கண்டி மாவட்டம் புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடகம பிரதேசத்திலுள்ள அமுனுவல வாவியில் நீராட சென்ற இரு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணமால் போயுள்ளதாக புஸ்ஸல்லாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நவோதவிட்ட, கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.... Read more »
யாழ்.பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்திருக்கின்றார். நேற்றைய தினம் காலை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது சடுதியாக குளவிகள் இவரை கொட்டிய நிலையில் மயக்க மடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.... Read more »
விபத்தில் சிக்கி மூளை சாவடைந்து உயிரிழந்த 16 வயது சிறுவனின் கண்களை பெற்றோர் தானம் செய்த நிலையில் சிறுவனின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்னர் இரு இளைஞர்கள் பார்வை பெற்றுள்ளனர். அநுராதபுரம் மாவட்டம் கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த அலுத்தியுல்வெவ மகா வித்தியாலயத்தில் தக்ஷித... Read more »
கொழும்பு 15ல் நேற்று மாலையும் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 7 நாட்களில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டவர் என பொலிஸாரால் கூறப்படும் 24 வயதான வினோதன் என்பவர் நேற்று மாலை 5.00 மணியளவில், முச்சக்கர வண்டியொன்றில்... Read more »
யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு கமநல சேவை திணைக்களம் ஊடாக வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளின் அடிப்படையில் இன்று தொடக்கம் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது. மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நவடிக்கைகளை இன்று முதல் முன்னெடுக்கவுள்ளன. மாவட்ட விவசாயிகளுக்கு... Read more »
தோல்வியடைந்த ஐனாதிபதியாக பதவி விலகபோவதில்லை. அதேபோல் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கூறியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகபோவதில்லை மக்கள் தமக்கு... Read more »
பால்மாவின் விலையை மீண்டும் அதிகரிப்பது தவிர்க்க முடியாது. இன்னும் சில தினங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வரி அதிகரிப்பு காரணமாகவு பால் மாவின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தற்போது... Read more »
எரிவாயு விலையை லாஃப்ஸ் நிறுவனம் அதிகரித்துள்ளது. இதற்கமைவாக, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 6,850 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 2,740 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று முதல் எரிவாயு சிலிண்டர்களை லாஃப்ஸ் நிறுவனம் சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாக... Read more »
அரச சேவையாளர்களுக்கு அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக... Read more »