வவுனிக்குளம் மீனவர்களின் வலைகள் மற்றும் துடுப்புகள் சேதம்.

முல்லைத்தீவு – வவுனிக்குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் அம்பாள்புரம் கிராம மீனவர்களின் வலைகள் மற்றும் துடுப்புகள் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களினால் அறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன் தினம் தொழில் முடித்து வீடு திரும்பிய நிலையில் மறுநாள் வலைகள் அறுக்கப்பட்டு, படகுகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விசமத்தனமான செயலால் பிரதேச மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனிக்குளம் மீனவர்களின் வலைகள் மற்றும் துடுப்புகள் சேதம் (PHOTOS)

குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews