பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவருடைய குடும்பஸ்த்தினர் பாதுகாப்புக்காக திருகோணமலை கிழக்கு கடற்படை கட்டளை முகாமிற்கு அழைத்துவரப்பட்டதாக வெளியான தகவலையடுத்து பொதுமக்கள் கடற்படை முகாம் வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். பெருமளவில் கடற்படைமுகாமில் கூடிய பொதுமக்கள் வாயிலில் நின்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர். Read more »
தென்னிலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம் பரவலாக இடம் பெற்று வருகின்ற அதே வேளை மகிந்த ராஜபக்ச தன்னுடைய இருப்பையும் தமது குடும்ப ஆட்சியின் இருப்பையும் தக்க வைக்கும் வகையில் கடுமையாக காய்களை நகர்த்தி வருகின்றார். அதில் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றிகளையும் கண்டு வருகின்றார். அவரது... Read more »
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் இல்லத்திற்கு தற்போது தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
நேற்று காலி முகத்திடலில் அமைதியாக அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ஆளும் கட்சியான பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் எனப்படும் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதலுக்கு எமது கடும் கண்டனங்களை தெரிவிக்கிறோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ... Read more »
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பயங்கரவாதத்தை நினைவுபடுத்துகின்றன : க.வி.விக்னேஸ்வரன்.
கொழும்பு காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அரசாங்கமே முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்... Read more »
நேற்றைய தினம் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த முன்வந்த அருட்தந்தையர்களை மகிந்த ஆதரவாளர்கள் கொடூரமாக தாக்கி அங்கிருந்த கூடாரங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதன்போது போது அதனை காணொளியாக பதிவு செய்த எமது லங்காசிறியின் அலுவலக செய்தியாளரை அங்கிருந்த கலகக்காரர்கள் தாக்கியுள்ளனர். இதன்போது ஊடகவியலாளரின் கைத்தொலைபேசிகள் என்பன... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக கொழும்பில் மிகவும் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அரச ஆதரவாளர்கள் தாக்கியதை தொடர்ந்து அமைதியாக இடம்பெற்ற போராட்ட களம் வன்முறை களமாக மாறியது. இதன் விளைவான அரச... Read more »
அலரி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், தற்போது அங்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ள நிலையில், அலரி மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அலரி மாளிகையின் கதவுகளை உடைத்துக்கொண்டு மக்கள் பிரவேசிக்க முற்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியில்... Read more »
அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம இன்று வன்முறையாக மாறியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் மிகவும் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த போராட்ட களத்தில் நேற்று குண்டர்கள் களமிறங்கி போராட்டகாரர்கள் மீது கொடூரமாக... Read more »
நாட்டில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு ஈடுபடவுள்ளன. இது தொடர்பில் நேற்றைய தினம் அறிவிப்பு வெளியாகியிருந்தது நள்ளிரவு 12 மணிமுதல் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தபால் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த 1000 தொழிற்சங்கங்களே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாடளாவிய ரீதியிலுள்ள... Read more »