கொழும்பு வன்முறை – பொலிஸார் உள்ளிட்ட இருவர் பலி.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற வன்முறையின் போது பொலிஸார் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் போது 218 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல் Read more »

பரபரப்புக்கு மத்தியில் அலரி மாளிகையிலிருந்து தப்பிய மகிந்த.

நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வெளியேறிச் சென்றுள்ளார். நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை அலரி மாளிகையை சுற்றியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பலத்த இராணுவ... Read more »

மகிந்த ராஜபக்ச பதவி விலகல் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. Read more »

ஜனாதிபதிக்கும் சமயத் தலைவர்கள் குழுவிற்கும் இன்று காலை இடம் பெற்ற விசேட சந்திப்பு…..!

ஜனாதிபதிக்கும் சமயத் தலைவர்கள் குழுவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன், தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று காலை இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.மத தலைவர்கள் பல ஆலோசனைகளை வழங்கினர். கட்சி சார்பற்ற பிரதமர் நியமனம், 15... Read more »

காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து வைத்திய நிபுணர்கள் சங்கம் பணி புறக்கணிப்பு.. தனியார் வைத்தியசாலைக்கு அலைய வேண்டாம் எனவும் கோரிக்கை.

காலி முகத்திடலில் இடம்பெற்ற ஜனநாயகப் போராட்டத்தின் மீது கட்டவிழ்த்துவிட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து இலங்கை வைத்திய நிபுணர்கள் சங்கம் இன்றைய தினம் நாடு தழுவிய பணிப்பகிஷ்தரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர் ஞானசேகரன் தெரிவித்தார். அவர் அனுப்பிய ஊடக அறிக்கையில் தெரிவித்ததாவது காலி... Read more »

இலங்கையில் நீடிக்கும் பதற்றம் – அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு –

இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீதான வன்முறைளுக்கு... Read more »

ஊரடங்கு காலை 7:00 மணியுடன் தளர்வு….!

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை தளர்த்தப்படவுள்ளது. நாளை காலை 7 மணிக்கு இவ்வாறு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ்  இன்று  இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை நாடு... Read more »

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீடும் தீக்கிரை! –

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் வீட்டின் மீதும் பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு கலகக்காரர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதேவேளை பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டதுடன் புத்தளம் நாடாளுமன்ற... Read more »

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அமரக்கீர்த்தி அத்துக்கோராள எம்.பி உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு –

நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரக்கீர்த்தி அத்துக்கோரள, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் குருணாகல் அலுவகத்துக்கு தீ வைப்பு…!

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் குருணாகல் அலுவகத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள், வீடுகள், வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. Read more »