யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா பலியெடுப்பு! மேலும் 6 பேர் மரணம், கடந்த 10 நாட்களில் மட்டும் 62 பேர் மரணம்.. |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 25 வயதான தாய், யாழ்.வண்ணார் பண்ணையை சேர்ந்த 60 வயதான பெண், பருத்தித்துறையை சேர்ந்த 78 வயதான ஆண், மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தொண்டமனாறை சேர்ந்த 83 வயதான ஆண், பருத்தித்துறையை சேர்ந்த 81 வயதான பெண், வல்வெட்டித்துறையை சேர்ந்த 82 வயதான பெண் ஆகிய 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை செப்ரெம்பர் மாதத்தின் கடந்த 10 நாட்களில் 62 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 322 ஆக உயர்வடைந்திருக்கின்றது

Recommended For You

About the Author: Editor Elukainews