தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் ஆசிரியர்கள் இருவரது இடமாற்றத்தை நிறுத்தக் கோரி மகஜர்!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் ஆசிரியர்கள் இருவரது இடமாற்றத்தை நிறுத்துமாறு கோரி பெற்றோரால் அதிபருக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டது. இடமாற்றத்தை இரத்துச் செய்து நல்லதொரு தீர்வைப் பெற்றக்கொள்வதற்காக ஆளுநர், அமைச்சர் ஆகியோரை மீண்டும் நாடி விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அதிபரிடம் கோரப்பட்டுள்ளது. கையளிக்கப்பட்ட மகஜரில்,எமது... Read more »

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்கை நடவடிக்கை கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைப்பு!

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்கை நடவடிக்கை கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தில் தென்னம் பிள்ளைகளை நாட்டும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில், தென்னம்... Read more »

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து

கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (17.11.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேருந்து வாதுவ பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்தின் போது மிதி... Read more »

இலங்கைக்கு மாலைதீவு வழங்கிய ஆதரவு: நேரில் சென்று நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் செயல்முறை குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க, மாலைதீவின் புதிய அதிபர் முகமது முய்சுவுக்கு விளக்கியுள்ளார். மாலைதீவு அதிபர் செயலகத்தில் முகமது முய்சுவுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த... Read more »

நல்லூர் ஆலய வளாகத்தில் பற்றரி திருடியவர் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது!

நல்லூர் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில்பற்றரியை திருடியவர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது கந்த சட்டி விரத தினத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறும் நிலையில்  நல்லூர் ஆலயத்திற்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்ற... Read more »

மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சரிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து தெரிவித்த போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு... Read more »

ஊர்காவற்துறையில் 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருட சிறை!

ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருடங்கள் சிறை தண்டணை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. குறித்த நபர் தனது மனைவியைப் பிரிந்து தனது மகளுடன் வாழ்ந்து வந்த நிலையிலேயே இவ்வாறு தனது மகளை அடித்துத்... Read more »