சுதந்திரக் கட்சி பதில் தலைவராக விஜயதாச ராஜபக்க்ஷவை நியமிப்பதற்கு தடை உத்தரவு..!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும் பொதுச் செயலாளராக துஷ்மந்த மித்திரபாலவும் செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தற்காலிக தலைமைச் செயலாளர் எடுத்த முடிவுகளை அமல்படுத்த தடை விதித்து நீதிமன்றம் மற்றொரு... Read more »

படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்..!

மன்னார்  – முத்தரிப்புத்துறையில்  கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று   காலையில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தார். தொழிலுக்கு சென்றவேளை கடலில் வைத்து படகு... Read more »

இலங்கையின் பாரிய திட்டங்களில் ஈரான் துணை நிற்கும்..! ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி

ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் ஜனாதிபதி  இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்ட நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஈரான் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் முன்னேற்றத்துக்காக  பாரிய... Read more »

ஈரானிய தொழில்நுட்பத்துடன் உமா ஓயா திட்டம் வெற்றி..!

ஈரான் ஜனாதிபதியும் இலங்கை ஜனாதிபதியும் இணைந்து உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். ஈரானிய தொழில்நுட்பத்துடன் உமா ஓயா திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில்... Read more »

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு…!

இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (24) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து... Read more »

பலத்த பாதுகாப்புடன் யாழ்.மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான நீதிபதி இளஞ்செழியன்…!

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று  (24) யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாகாண  மேல் நீதிமன்றில்... Read more »

இலங்கையில் மீண்டும் தலை தூக்கும் மலேரியா! 62 நோயாளர்கள் பதிவு..!

2024ஆம் ஆண்டில் இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்தவர்களிடமே அதிகளவான மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.... Read more »

மருதமுனையில் போதைப்பொருளுடன் கைதான அரச ஊடகவியலாளரின் மகன்…!

பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படையினரால் தகவல் ஒன்றின் அடிப்படையில்  போதைப் பொருட்களுடன்  கைதான சந்தேக நபரான  அரச ஊடகவியலாளரின் மகனை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டிருந்தது. 24 வயதுடைய குறித்த சந்தேக நபர் நீண்ட... Read more »

இலங்கையை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி..!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் நாட்டை வந்தடைந்தார். மத்தள சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் இலங்கை வந்தடைந்துள்ளார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று (24) ஈரான் ஜனாதிபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. உமா ஓயா திட்டத்தை... Read more »

வடமாகாண சுகாதார சேவைகள் புதிய பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்பு…!

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண இன்றையதினம்(24) சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக இருந்த, யாழ்ப்பாணம் போதனா... Read more »