இலங்கையில் மீண்டும் தலை தூக்கும் மலேரியா! 62 நோயாளர்கள் பதிவு..!

2024ஆம் ஆண்டில் இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார்

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,

ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்தவர்களிடமே அதிகளவான மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் கடைசியாக 2012 ஆம் ஆண்டு மலேரியா நோயாளி பதிவாகியிருந்த போதிலும், 2023 ஆம் ஆண்டில் 62 மலேரியா நோயாளிகள் பதிவாகியிருந்தனர்

மேலும் அந்த நோயாளர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைதி காக்கும் கடமைக்கு சென்ற இராணுவத்தினர் மற்றும் இரத்தினக்கற்கள் வர்த்தகத்திற்கு சென்றவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews