சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் நிலவும் சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக கட்சி உறுப்பினர்கள் இன்று கொழும்பில் அவசரமாக கூடவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் நிலவும் சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக கட்சி உறுப்பினர்கள் இன்று கொழும்பில் அவசரமாக கூடவுள்ளனர். இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு 10, டீ.பீ.ஜயா மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். கட்சி... Read more »

அபாயகரமான பயணத்தை மேற்கொள்ளும் இலங்கை வரும் சுற்றுலா பயணிகள்..!

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடருந்துகளின் மிதிபலகைகளில் பயணிப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் தங்களின் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் ஃபுட் போர்டில் ஏறி செல்ஃபி எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், இதனால் பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில், ஒஹியா தொடருந்து... Read more »

மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியை வந்தடைந்தது.

மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியை வந்தடைந்தது. கிளிநொச்சி அக்கராயன் ஆரோக்கியமாதா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு அருட்தந்தை அல்பட் சேகர் தலைமையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து விசேட வழிபாடு இடம்பெற்றதுடன், மாவட்டத்தின் பல பிரதேசங்களிற்கும் திருச்சொருப பயணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மடுமாதா முடிசூடப்பட்டு 100வது... Read more »

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படும்

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 250 முதல் 300 ரூபா வரை குறைக்கப்படும் என... Read more »

இராஜவரோதயம் வீதியில் இடம் பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜவரோதயம் வீதியில் இடம் பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார். குறித்த விபத்து  சம்பவம் நேற்று (23)இடம் பெற்றது. வீதியை கடக்க முற்பட்ட போது வான் ஒன்று மோதியதில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது வேனுடன் மோதுண்டதில் 15... Read more »

மக்களுக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், உரிய முறைகளின் ஊடாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது வாகனங்கள் கொள்வனவு செய்யும் தரப்பினரின் பொறுப்பாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.... Read more »

எல்ல பகுதியில் மண்சரிவு அபாயம்..!

எல்ல – கரடகொல்ல, மலித்தகொல்ல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்த 10 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இன்று  இடம்பெயர்ந்ததாக எல்ல பிரதேச செயலாளர்  இந்திக்க கயான் பத்திரன தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் முன்பு பெரியளவில் கச்சா நீர் ஓடிக் கொண்டிருந்ததாகவும், அந்த இடத்தில் நிலமும்... Read more »

ரஷ்யா-உக்ரேன் போரில் பணியாற்ற இலங்கையர்கள் கடத்தல்..!

ரஷ்யா  மற்றும் உக்ரைனில் இராணுவ சேவைக்காக இலங்கையர்கள் கடத்தப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும் வெளிவிவகார அமைச்சும் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் போரில் ஈடுபடுவதற்காக ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யும் பாரிய... Read more »

சுதந்திரக் கட்சி பதில் தலைவராக விஜயதாச ராஜபக்க்ஷவை நியமிப்பதற்கு தடை உத்தரவு..!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும் பொதுச் செயலாளராக துஷ்மந்த மித்திரபாலவும் செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தற்காலிக தலைமைச் செயலாளர் எடுத்த முடிவுகளை அமல்படுத்த தடை விதித்து நீதிமன்றம் மற்றொரு... Read more »