இராஜவரோதயம் வீதியில் இடம் பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜவரோதயம் வீதியில் இடம் பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த விபத்து  சம்பவம் நேற்று (23)இடம் பெற்றது.

வீதியை கடக்க முற்பட்ட போது வான் ஒன்று மோதியதில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது வேனுடன் மோதுண்டதில் 15 அடி தூரமளவில் குறித்த மாணவி தூக்கி வீசப்பட்ட நிலையில் இவ் விபத்து இடம் பெற்றமை சீ.சி.டீ.வி கானொளி மூலம் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பாக கண்டியை சேர்ந்த வயது (32) வான் சாரதி திருகோணமலை தலைமையகப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மாணவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த விபத்துக்குள்ளான வேனை பொலிஸார் கைப்பற்றியதாகவும் கைதான சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews