வட்டுக்கோட்டை பவித்திரன் வெட்டிப் படுகொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு ,வீடு... Read more »

தனது 12 வயது மகளையும் தோழியையும் துஷ்பிரயோகம் செய்த தந்தை..!

மொனராகலை – வெல்லவாய பகுதியில் தனது 12 வயது மகளையும், அவரது 11 வயது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கிராம மக்கள் வழங்கிய தகவலின்... Read more »

முகமாலை பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களால் பரபரப்பு…!

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது  மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  முகமாலை பகுதியில் நேற்றைய தினம்(25) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது. இதனையடுத்து... Read more »

எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறை..!

எரிசக்தி துறைக்கான புதிய ஒழுங்குமுறை ஆணையத்தை அறிமுகப்படுத்த, மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் எண்ணெய், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு, மசகு எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சுத்திகரிப்பு,... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் குளிர்காயும் அரசியல்வாதிகள்…! ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு…!

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் ஒரு சில சுயநல அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்காக அந்த உறவுகளின் உணர்வுகளை வியாபாரமாக்கி வருவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்(26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து... Read more »

சஹ்ரானின் பின்னணியில் இருந்தவருக்கு கோட்டா வழங்கிய உயர் பதவி! அம்பலப்படுத்திய பொன்சேகா

தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலேதான், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியாக கூறப்படும் சஹ்ரான் ஹாசிமை வளர்த்துவிட்டவர் என முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும் இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என... Read more »

உடலுறவு கொள்ளாமல் கர்ப்பமான 13 வயது சிறுமி..?

குருநாகல் – ஹெட்டிப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம் தரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வயிற்று வலியினால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், வைத்திய பரிசோதனையில்... Read more »

ரஷ்யாவில் கூலிப் படைகளாக செயற்படும் இலங்கையர்கள்…!

இலங்கையை சேர்ந்த பெருமளவானோர் ரஷ்யாவில் கூலிப் படைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ரஷ்யா உக்ரைன் யுத்தத்திற்காக இந்த நாட்டிலிருந்து பலர்... Read more »

ஜனாதிபதிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக இளைஞர் சேவை சபையின் சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாட்டை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எழுத்து மூலம் இன்று (26)... Read more »

ஹைட்டியின் பிரதம மந்திரி ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்துள்ளார்.

ஹைட்டியின் பிரதம மந்திரி ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசாங்கம் அமைப்பதற்கு நிலுவையில் உள்ள நிலையில், பொருளாதார அமைச்சர் Michel Patrick Boisvert இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது. நாட்டின் சக்திவாய்ந்த கும்பல்களின் கூட்டணி பிப்ரவரி இறுதியில் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் மீது... Read more »