தனது 12 வயது மகளையும் தோழியையும் துஷ்பிரயோகம் செய்த தந்தை..!

மொனராகலை – வெல்லவாய பகுதியில் தனது 12 வயது மகளையும், அவரது 11 வயது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன்,

மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews