இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தைக்குள்பிரவேசிக்கும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விற்பனை செய்யும் விலையை விடக் குறைவாக எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. மூன்று நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் இந்த மாத இறுதியில் முடிவடையும், அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் அதன் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என்று... Read more »
உலக சந்தையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், தங்கம் விலை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.16 வீதத்தினால் குறைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 2007.66 டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »
அமெரிக்காவின் யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக், என்ற கடற்படை போக்குவரத்து கப்பல், நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இது, அமெரிக்க கடற்படை கட்டளையின் விரைவுப் போக்குவரத்துக் கப்பல் ஆகும். துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள், உள்-திரையரங்கு மற்றும் போக்குவரத்தை வழங்கும் திறன் கொண்ட இந்த கப்பலில் 1200... Read more »
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் ஏற்றுமதி வருமானம் பெறுபவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை டொலர்களை, இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என மத்திய வங்கி விதித்த சட்டத்தை, இம்மாதம் முதல் இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து தற்போது பெறப்படும் வருமானத்தின்... Read more »
கியு.ஆர். முறைமையைப் பொருட்படுத்தாமல் எரிபொருளை விநியோகித்த 66 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இடைநிறுத்தியுள்ளது. முன்னதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 40 சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதுடன், இந்தியன் ஓயில் நிறுவனத்திற்கு சொந்தமான 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு... Read more »
அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர்,எதிர்வரும் ஜூன் மாதம் முதல் புதிய திட்டத்தின் மூலம் நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டம்... Read more »
‘‘விக்கிரகங்களை யாரும் வலுக்கட்டாயமாக வைக்க முடியாது என்று கூறுகின்ற ஜனாதிபதி ஏற்கனவே உள்ள விக்கிரகங்களை உடைப்பதற்கு எவ்வாறு அனுமதிகளை கொடுத்துள்ளார் ‘‘ என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முரசுமோட்டை வட்டார கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு ... Read more »
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் நேற்று 08/04/2023 இளைஞர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்... Read more »
அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றில் நிர்வாக தெரிவு கூட்டத்தின் பின்னர் அண்ணன் தம்பி ஆகிய இரு சகதோரர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் அண்ணன் உயிரிழந்ததுடன் தம்பியார் உட்பட 3 பேரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளதாக... Read more »
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்கள் பயணித்த கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 9 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து மாத்தளை – தொட்டகமுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த மாணவர்கள் மாத்தளையில் உள்ள... Read more »