காணாமல்போன ஆண் ஒருவர் தணமல்வில – பலஹருவ வாவியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பலஹருவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய நபரே நேற்று (07.04.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மரணத்துக்கான சரியான காரணம் சடலம் இருந்த வாவிக்கு அருகில் அவரது... Read more »
இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும் என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. குறித்த சட்டத்தின் ஊடாக மனித உரிமைகளை மீறுவதற்கு, அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பயங்கரவாத... Read more »
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேசாலை கிராமத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் நேற்று காலை வாங்கிய உணவில் பூரான் பூச்சி காணப்பட்டுள்ள நிலையில், குறித்த விடயம் தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. விரைந்து செயற்பட்ட மன்னார்... Read more »
தமிழ்த்தேசிய சக்திகளைப் பொறுத்தவரை மலையகத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர் உட்பட உலகெங்கும் வாழும் தமிழ்நாட்டு வம் சாவழித்தமிழர்கள் வலுவான சேமிப்பு சக்திகளாவர். இனத்தாலும், மொழியாலும், பண்பாட்டாலும் இணைந்த தொப்புள் கொடி உறவு அது. எண்ணிக்கையில் சிறியதேசிய இனமான தமிழ் மக்களை உளவியல் ரீதியாக சிங்கள தேசத்திலும்... Read more »
அரசியலமைப்பில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் உரிமைகளைக்கூட ஏரிஏ சட்டம் பறித்தெடுப்பதற்கான உள்நோக்கங்களைக் கொண்டிருக்கின்றது என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் எஸ்ஜீவநாயகம் தெரிவித்துள்ளார். புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »
கொம்பனிகளிற்குள் அடிமையாகி நாங்கள் இயல்பற்ற மக்களாக மீளவும் சுதந்திர போர் ஒன்றில் ஈடுபடுமளவிற்குகூட இந்த மக்கள் தள்ளப்படலாம் என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் காலபோகத்திற்கான உரம் உள்ளிட்ட உள்ளூடுகள் வழங்குதலை தனியாரிடம் கையளிப்பது தொடர்பில் அரசு... Read more »
சாவகச்சேரியில் பொலிசாருக்கு இலஞ்சம் கொடுத்து ஆடு கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்லும் வாகனங்கள் சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும்... Read more »
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுன்னாகம் ஆலடி பகுதியில் சுன்னாக பொலிசாருடன் இணைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 29 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து 36 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்... Read more »
இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு நீதி கோரி டில்லியில் இந்து அமைப்புகள் போராட்டம் ஒன்றினை நேற்று முன்தினம் (05/04/2023) முன்னெடுத்திருந்தன. இதில் ஆலயங்கள் இடிக்கப்படுவது மற்றும் இந்துக்களுக்கு தீங்கு இழைக்கப்படுவது ஒரு கலாசார இனப்படுகொலை எனவும் இந்து அமைப்புக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் கட்டுமானப் பணிகள்... Read more »
இலங்கை வாழ் கிறிஸ்தவர்கள் இன்று புனித பெரிய வெள்ளி கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டுவருகின்றனர். இவ் கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ். மரியன்னை பேராலயத்தில் புனித வெள்ளி கூட்டுத்திருப்பலி இன்று... Read more »