தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை மரணம் – உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு!

தொடர்ச்சியாக காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. உரும்பிராயை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தன் ஜான்சி என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில நாட்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் திடீரென... Read more »

திருகோணமலையில் விபச்சார விடுதி ஊர்மக்களால் சுற்றிவளைப்பு – இரு பெண்கள் சிக்கினர்

திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இலுப்பைக்குள வீதியில் நெடுங்காலமாக மறைமுகமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் நேற்று இரவு அப்பிரதேச மக்களால் சுற்றிவைக்கப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரவித்தனர். சுற்றிவளைப்பின்  போது விடுதியில் இரகசியமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட இருபெண்களை பிடித்து... Read more »

காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி….!

காரைநகர் – ஆலடி சந்தியில், பிரதேச சபையின் அனுமதியின்றி  சட்டவிரோத மீன் சந்தைக் கட்டிடம் ஒன்று அமைக்கப்படுவதாக 30.07.2023 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும் பிரதேச சபை செயலாளருக்கும், முன்னாள் பிரதேச சபைத்தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரனால் முறைப்பாடு செய்யப்பட்டது. இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை... Read more »

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான ஊடக சந்திப்பு!(video)

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று இடம்பெற்றது. சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்றை நேற்றைய தினம் 31.07.2023 ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வை.தவனாதன் ஏற்பாடு செய்திருந்தார்.... Read more »

அணில் கட்டிய பாலமும் ரணில் கட்டாத பாலமும் ? – ஆய்வாளர் நிலாந்தன்

ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன.ஏற்கனவே பலாலியிலிருந்து மீனம்பாக்கத்திற்கும்,காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டுக்கும், மன்னாரியிலிருந்து தமிழ்நாட்டுக்கும் என மூன்று திட்டங்கள் யோசிக்கப்பட்டன.இந்தக் கடல் வழிப்பிணைப்பு,வான்வழிப் பிணைப்பு, என்பவற்றோடு,தரை வழியாக ஒரு பாலத்தை கட்டுவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.இவைதவிர... Read more »

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்….!

முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக நேற்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும்... Read more »

சிறைகளில் உயிர்நீத்த 54 தமிழ் அரசியல் கைதிகளின் நினைவேந்தல்…!

யாழ்ப்பாண மாவட்ட குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் எற்பாட்டில், சிறைகளில் சாவினை தழுவிய குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகிய 54  தமிழ் அரசியல் கைதிகளின்  நினைவேந்தல் தினம்  நேற்று யாழ்ப்பாணம்-  குருநகர் புதுமை மாதா தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள வாஸ்து தலத்தில், குறித்த அமைப்பின் ... Read more »

13 இறுதித் தீர்வல்ல -ரணில் விக்கிரமசிங்க

தற்போதைய நிலமையில் – இந்த அரசால் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் தொடர்பிலேயே தற்போது அதிகம் பேசப்படுகின்றது. அதுதான் இறுதித் தீர்வா என ஜனாதிபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். ’13ஆம்... Read more »

தேசிய கிரிக்கெட் அணிக்குள் தெரிவான மாணவிக்கு கௌரவிப்பு!

19 வயது பிரிவிற்குட்பட்ட தேசிய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கான கௌரவிப்பு நிகழ்வு, நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் சுழிபுரம் பாண்டவெட்டை காட்டுபுலம் இணைந்த கரங்கள் அமைப்பின் தலைவர் திரு இராசேந்திரன்  தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்பொழுது தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியின்... Read more »

மட்டு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பங்குபற்றும் அரசியல்வாதிகள் அறநெறியில் ஒழுக்க நெறியை கற்றுவிட்டு கூட்டத்தை நடாத்தவும் – தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணவதிபிள்ளை மோகன் வேண்டுகோள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழுவின் செயற்பாடுகள் உலகம் அறிந்தது இன்று உலகமே வாய்விட்டு சிரிக்கின்ற மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் எனவே இந்த கூட்டத்தில் பங்குபற்றுகின்ற அரசியல்வாதிகள் அனைவரும் அறநெறி வகுப்புக்களில் சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒழுக்க நடைமுறையை சிறுவர்களுடன் இருந்து கற்றுவிட்டு கூட்டத்தை நடாத்துமாறு தமிழர்... Read more »