டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் நாட்டை வந்தடைந்தது…..!

மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது. இந்த நிலையில் குறித்த பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.... Read more »

2 கிலோ மீற்றர் தூரத்திற்கு வரிசையில் நிற்கும் வாகனங்கள்……!

டீசல் இன்மையால் இன்றைய தினமும் நாட்டின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் சாரதிகள் காத்திருக்கின்றனர். சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திற்கு சாரதிகள் காத்திருக்கின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. அத்துடன் பல பேருந்துகளும் அதில் அடங்குகின்றன.... Read more »

நாளையும் நாடு முழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு…..!

நாட்டில் இன்றைய தினத்தை போன்றே நாளையும் நாடு முழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அவ்வாறே, மாலை 6... Read more »

தற்போதைய அரசாங்கத்துக்கு உதவுவதற்கு நாடுகள் தயாராக இல்லை- எதிர்க் கட்சித் தலைவர்………!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக நிவாரண முறையில் நாட்டுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்க மூன்று நாடுகள் முன்வந்துள்ளன. எனினும் தற்போதைய அரசாங்கத்துக்கு அந்த உதவியை வழங்குவதற்கு தயாராக இல்லை என்று அந்த நாடுகள் கூறிவிட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித்... Read more »

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு நல்லாட்சி அரசாங்கமே முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் – லலித் எல்லாவல எம்.பி

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்தமை, பெற்றுக்கொண்ட கடன் உள்ளிட்ட நிதிகளினூடாக நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு என்ன செய்தது என்பதை கேட்கமுனைவதாகவும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.... Read more »

அமைச்சுப் பதவிகளில் மாற்றம்.! பவித்ராவுக்கு எரிசக்தி அமைச்சு……!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமைச்சர் காமினி லொக்குகே இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, கீழ்வரும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே பொறுப்பேற்றுள்ளார் மின்சக்தி அமைச்சராக... Read more »

உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கம்- ஜனாதிபதி ஊடக பிரிவு…..!

அமைச்சர்களாக இருந்த உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சுப் பதவகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ஊடக பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. அரசியலமைப்பின் 47/2 பிரிவின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அதிகாரத்துக்கு அமைய அவர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து இன்று மாலை நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக... Read more »

அதிகாலை 3.30 மணிக்கு வீடு புகுந்து குடும்பஸ்த்தர் மீது வாள்வெட்டு! ரவுடியை வாளுடன் மடக்கி பிடித்த வீட்டார்.. |

யாழ்.நவாலி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீடு புகுந்த வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் தாக்குதல் நடத்தவந்த வாள்வெட்டு குழு ரவுடி வீட்டாரினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருச்சபை வீதி நவாலி... Read more »

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு..!

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும்... Read more »

பதுக்கல் வியாபாரிகளை கண்டறிய நாடு முழுவதும் விசேட சோதனை..!

நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் வர்த்தகர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கையினை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.  சில வர்த்தகர்கள், பொருட்களை மறைத்து வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க கூறியுள்ளார். அத்தியாவசிய... Read more »