2 கிலோ மீற்றர் தூரத்திற்கு வரிசையில் நிற்கும் வாகனங்கள்……!

டீசல் இன்மையால் இன்றைய தினமும் நாட்டின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் சாரதிகள் காத்திருக்கின்றனர்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திற்கு சாரதிகள் காத்திருக்கின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.
அத்துடன் பல பேருந்துகளும் அதில் அடங்குகின்றன.
எவ்வாறாயினும் நேற்று கட்டணம் செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட 37,300 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் சுப்பர் டீசல் என்பன முத்துராஜவெல எண்ணெய் களஞ்சியசாலையில் தற்போது களஞ்சியப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin