உக்ரைன் – ரஷ்ய போர்! உயிரிழப்பு விபரங்களை வெளியிட்டுள்ள ஐ.நா…!

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் இன்றுடன் 14 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. உக்ரைனின் சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றிவிட்டன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை பிடிக்க ரஷ்ய இராணுவம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றது. இதுவரை... Read more »

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் இரண்டு மாதங்களின் பின் உயிரிழப்பு!

மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்து இதயத்தைப் பெற்ற நபர் இரண்டு மாதங்களின் பின் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தான இதய நோயால் பாதிக்கப்பட்ட 57 வயது டேவிட் பென்னட், மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்து இதயத்தைப் பெற்றிருந்தார், இது உறுப்புகள் செயலிழந்த நூறாயிரக்கணக்கான... Read more »

உக்ரைன் – ரஷ்யா போர்! – தெர்மோபரிக் ஆயுதங்களை பயன்படுத்திய ரஷ்யா…!

உக்ரைனில் தெர்மோபரிக் ஆயுதங்களைப் பயன்படுத்தியதை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.TOS-1A ஆயுத அமைப்பு பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய பிரதிநிதி தெரிவித்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தெர்மோபரிக் ஆயுதம் என்றால் என்ன? சுற்றுப்புற காற்றில் இருந்து ஒக்ஸிஜனை உறிஞ்சி அதிக வெப்பநிலை வெடிப்பை... Read more »

தெரு விளக்குகளை அணைத்ததால் பெண்களுக்கு ஆபத்து! – நிபுணர்கள் எச்சரிக்கை.

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாகவும், வீதி விளக்குகளை அணைப்பது நிலைமையை மோசமாக்கும் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பகலில் மற்றும் மின்சாரம் தடைப்படும் போது பெண்கள் பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் நாட்டில், இரவில் தெரு விளக்குகளை அணைப்பது... Read more »

அத்துமீறும் ரஷ்யா! – உக்ரைனுக்கு பெருமளவு ஆயுதங்களை வழங்கும் பிரித்தானியா…!

ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள பிரித்தானியா உக்ரைனுக்கு ஆயுத விநியோகத்தை அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னர் 2,000 இலகுரக எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கிய பிரித்தானியா தற்போது 1,615 எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட... Read more »

மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் பெறுமதி கணிசமாக உயர்வு!

இலங்கையில் மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் பெறுமதி கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 230 ஆக வலுவடைந்ததையடுத்து நேற்றைய தினத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்திருந்தது. இந்நிலையில், இன்றைய தினம் இலங்கை... Read more »

திறைசேரியில் 400 மில்லியன் டொலர்கள் கூட இல்லை! – நாடு திவாலாகும் அபாயம்…!

திறைசேரியில் தற்போது 400 மில்லியன் டொலர்கள் கூட இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு 900 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின்... Read more »

200 அமெரிக்க டொலர்களுக்கு ஒரு வருட சுற்றுலா விசா! – இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பு …!

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரு வருட பல நுழைவு சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த விசாவிற்கு ஆண்டுக்கு 200 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று சுற்றுலா அமைச்சகம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. குறித்த விசாவை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும்... Read more »

ஐ.நா. ஆணையாளர் எம்மை வெருட்ட முடியாது! கோட்டாபய அரசு திட்டவட்டம்…!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அதிகார எல்லையை மீறி எம்மை வெருட்ட முடியாது என கோட்டாபய அரசு இடித்துரைத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 45 நாடுகளுள் 31 நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்தன என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்... Read more »

வீட்டுக்குள் புகுந்து வயோதிபர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தி, கத்தி முனையில் கொள்ளை..!

வீட்டுடன் கடை ஒன்றினை நடத்திவரும் வயோதிப தம்பதிகளின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் கத்தி முனையில் அச்சுறுத்தியதுடன் வயோதிபரை தாக்கி காயப்படுத்திவிட்டு 32 பவுண் நகை மற்றும் 7 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் ஒட்டுசுட்டான் பகுதியில் நேற்று அதிகாலை 2... Read more »