பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் இரண்டு மாதங்களின் பின் உயிரிழப்பு!

மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்து இதயத்தைப் பெற்ற நபர் இரண்டு மாதங்களின் பின் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிருக்கு ஆபத்தான இதய நோயால் பாதிக்கப்பட்ட 57 வயது டேவிட் பென்னட், மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்து இதயத்தைப் பெற்றிருந்தார், இது உறுப்புகள் செயலிழந்த நூறாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

மேரிலேண்ட் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஜனவரி ஏழாம் திகதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 8 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் பன்றியின் இதயத்தை நோயாளிக்கு வைத்தியர்கள் வெற்றிகரமாக பொருத்தினார்கள்.

அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது என்பதை மட்டும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin