இரு நாட்கள் வரிசையில் காத்திருந்தும் எரிபொருள் இல்லை..! கோபத்தில் வீதியை முடக்கிய மக்கள்.. |

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் 2 நாட்களாக வரிசையில் காத்திருந்தும் எரிபொருள் கிடைக்காததால் கோபமடைந்த மக்கள் வீதியை மூடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் நேற்று இரவு கண்டி – கொழும்பு வீதியில் பதற்றம் நிலவியது.  இரண்டு நாட்களாக எரிபொருளுக்காக வரிசையில் நின்றும் எரிபொருள்... Read more »

ராஜபக்சர்களை அடக்க சூனியம் வைக்கும் சிங்களவர்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 10 நாட்களாக ஓயாது தொடர்ந்து வருகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போராட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு... Read more »

இந்தியாவின் கடனுதவியில் பெறப்பட்ட எரிபொருள் முடியும் தருவாயில்:மின் வெட்டு நேரம் அதிகரிக்கலாம்…!

இந்திய கடன் யோசனை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட எரிபொருள் இந்த மாதம் 23 ஆம் திகதியுடன் முடிவடைந்து விடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமான ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். கடன் யோசனை திட்டம் மூலம் பெறப்படும் எரிபொருளை... Read more »

நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதற்கமைய, சகல விதமான பெட்றோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகளும் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது Read more »

யாழ்.பண்ணை பகுதியில் அரசுக்கு எதிராக தீபந்தங்களுடன் இளைஞர்கள் போராட்டம்..!

ஐனநாயகத்திற்கான ஒன்றிணைந்த இளையோர் அமைப்பினால் யாழ்.பண்ணை பகுதியில் இன்று மாலை தீப்பந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த தீப்பந்த போராட்டம் பண்ணைப் பாலத்தில் இருந்து பண்ணை சுற்றுவட்டம் வரை பேரணியாக சென்றது. குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்... Read more »

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அடித்து நொருக்கப்பட்டது வீடு..!

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று பிற்பகல் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் வீட்டில் கதவு மற்றும் ஜன்னல்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன. அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாய் தகராறு மோதலாக மாறிய நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மீது சைபர் தாக்குதல்..!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் உயரதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தியதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read more »

அமைதிவழி போராட்டங்களுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்தும் நோக்கமே கிடையாது..! பாதுகாப்பு அமைச்சு….!

நாட்டில் நடைபெற்றுவரும் அமைதிவழி போராட்டங்களுக்கு எதிராக இராணுவ அதிகாரத்தை பயன்படுத்தும் ஆயத்தங்கள் எவையும் இல்லை. என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறியுள்ளார். இது குறித்து பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போராட்டங்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில்... Read more »

இன்று தொடக்கம் 20ம் திகதிவரை மின்வெட்டு தொடரும்..!

நாடு முழுவதும் நாளை திங்கட்கிழமை தொடக்கம் 20ம் திகதி வரையிலான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன்படி நாளை திங்கள் கிழமை 4 மணி நேரம் 20 நிமிடங்களும், 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் மின்வெட்டு 4 மணி நேரம் 50 நிமிடங்களாக அதிகரிக்கும். Read more »

இறந்தவர்கள்போல் வேடமிட்டு கொழும்பில் போராட்டம் ஆரம்பம்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி இறந்தவர்கள்போல் வேடமிட்டு அமைதி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு – புதுக்கடையிலிருந்து – காலி முகத்திடல் வரையில் இந்த அமைதிவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Read more »