யானை தாக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி – உன்னிச்சையில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெடியமடு கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலியாகியுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  ஆயித்தியமலையில் வசித்து வரும் கோயில்போரதீவைச் சேர்ந்த (54 வயதுடைய) மு. விசயராசா என்பவரே இவ்விபத்தில் பலியாகியுள்ளார். நெடியமடு வைத்தியசாலைக்கு முன்னால் பிரதான வீதியில்... Read more »

கோட்டாபய மாலைத்தீவு சொகுசு விடுதியில் செலவிட்டுள்ள பெருந்தொகை பணம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைத்தீவிற்கு தப்பிச்சென்ற நிலையில், அந்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள சொகுசு விடுதியில் தங்கியிருக்க பெருந்தொகை பணத்தினை செலவிட்டுள்ளதாக இந்திய ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஇலங்கை விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் நேற்று... Read more »

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து நீக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் தொடர்பில் ஏனைய கட்சித்... Read more »

கொழும்பில் நீடிக்கும் பதற்றம் – அமெரிக்க தூதுவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு.

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நேரத்தில் அனைத்து தரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அழைப்பு விடுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். “நாட்டின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்புடன்... Read more »

கொழும்பில் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்! 75 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

இலங்கையில் இன்று படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் படையினர் உட்பட 75 பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்புக்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற சுற்றுவட்டத்தை அண்மித்த பொல்துவ சந்தியில் இன்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 33 பேர் கொழும்பு தேசிய... Read more »

பிரதமர் அலுவலகத்தின் தற்போதைய நிலைமை

இலங்கை பிரதமரின் அலுவலகம் தற்போது போராட்டகாரர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் மக்கள் போராட்டம் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். நேற்யை தினம் பதவி விலகுவதாக அறிவித்திருந்த போதிலும் ஜனாதிபதி... Read more »

பதவி விலகுவதாக கூறி நாட்டு மக்களை ஏமாற்றிய ஜனாதிபதி.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை இதுவரை சபாநாயகருக்கு அனுப்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் இது தொடர்பில் கட்சித்... Read more »

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நடைமுறை! வெளியானது வர்த்தமானி.

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  இதன்படி நாளை காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read more »

மக்களின் அமைதி போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது- எதிர்க் கட்சித் தலைவர்

இந்நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் முழு மக்களும் முன்னெடுத்த அமைதிப் போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்த தருணத்தில் இருவரை பாதுகாப்பதை விடுத்து முழு நாட்டு மக்களையும் பாதுகாப்பு படையினர் பாதுகாக்க வேண்டும் என்றும்... Read more »

தெற்கு அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டது போல வடக்கிலும் ஏற்படலாம்- யாழில் மத தலைவர்கள் எச்சரிக்கை!

தென்னிலங்கையில் அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் நிலைபோல வடக்கில் அரசியல்வாதிகளுக்கும் அவ்வாறான நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என இன்று நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மத தலைவர்கள் தெரிவித்தனர், தற்போதுள்ளபொருளாதார நெருக்கடியான நிலையில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து... Read more »