17 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான்கு பேர் கைது!

17 கோடி ரூபா பெறுமைதியான 8.5 கிலோ கிராம் தங்கத்தை சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்து வந்த நான்கு விமான பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் சுங்க திணைக்களத்தின் போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள்... Read more »

மற்றுமொரு சர்வதேச குற்றச்சாட்டுக்குள்ளான சிறிலங்கா!

மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக சிறிலங்கா உட்பட 42 நாடுகளில் உள்ள பொதுமக்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக சிறிலங்கா உட்பட 42 நாடுகளில் உள்ள பலர் பழிவாங்கல் மற்றும்... Read more »

ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ள மாணவர்களின் போஷாக்கு நிலை!: ஜி. சுகுணண்

மட்டு. மாவட்டத்தில் மாணவர்களின் போஷாக்குதன்மை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது எனவும் இதனை கட்டுப்படுத்தாவிடின் பாரிய விளைவு ஏற்படும் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி. சுகுணண் தெரிவித்துள்ளார். மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

கொட்டகலை – போகாவத்த மாணவி தாக்குதல் சம்பவம்! அதிபர் கைது

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தவிடயம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் திம்புள்ள... Read more »

எரிபொருள் விலையில் மாற்றம்..! வெளியாகியுள்ள தகவல்

எரிபொருளின் விலையில் நாளைய தினம் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை... Read more »

பசுமை வளர்ப்போம் தேசம் காப்போம்” எனும் தொனிப்பொருளில் 4000 பனை விதைகள் நாட்டிவைப்பு…!

வடமராட்சி கிழக்கு கேவில் பகுதி இளைஞர்களால் பசுமை வளர்ப்போம் தேசம் காப்போம்” எனும் தொனிப்பொருளில் நேற்று முன் தினமும், நேற்றும் 4000 பனை விதைகள் நாட்டப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் 2500 பனை விதைகளும் நேற்று 1500 பனை விதைகளுமாக மொத்தம் 4000 பனை... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் தொலைபேசி திருட்டு! 21 வயதான இளைஞன் 21 தொலைபேசிகளுடன் கைது…!

யாழ்.போதனா வைத்தியசாலை விடுதிகளில் தங்கியுள்ள நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்வையிட வருவோரிடம் தொலைபேசி திருட்டில் ஈடுபட்டுவந்த 21 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கையடக்க தொலைபேசிகள் தொடர்ந்து திருட்டு போயுள்ளன. அவை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின்... Read more »

பாண், பேக்கரி உற்பத்திகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு…!!

நாட்டில் பாண் உட்பட சகல பேக்கரி உற்பத்திகளினதும் விலைகள் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் உயர்த்தப்படவேண்டும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். எட்டு சதவீதமாக இருந்த வட் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்... Read more »

யாழ்.கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

யாழ்.கோப்பாய் பகுதியில் கடந்த 21ம் திகதி மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 21 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள் கொண்டிருந்த மேற்படி இளைஞன் கோப்பாய் பகுதிக்கு அண்மையாக வீதியின்... Read more »

ஜனநாயக போராளகள் கட்சிக்கு எந்த வட்ஸ் அப் குறுப்பும் இல்லை, ஜீ.ஜீ யின் படத்தை பொத்துவிலிலிருந்தஹ பொலிகண்டிவரை கொண்டுவர முடியுமா? வேந்தன் சவால்….!

தியாகி திலீபனின் நினைவேந்தலை 2016ம் ஆண்டு நடத்தியவர்கள் நாங்கள், 2017ம் ஆண்டு எங்களுடன் சேர்ந்து நினைவேந்தலை நடத்த கேட்டது தமிழ் காங்கிரஸ், 2018ம் ஆண்டு யாழ்.மாநகரசபை செய்தது. பின்னர் இரு வருடங்கள் சீராக நடக்கவில்லை. பின்னர் எப்படி 6 வருடங்களாக தியாகி திலீபனின் நினைவேந்தலை... Read more »