பாண், பேக்கரி உற்பத்திகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு…!!

நாட்டில் பாண் உட்பட சகல பேக்கரி உற்பத்திகளினதும் விலைகள் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் உயர்த்தப்படவேண்டும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

எட்டு சதவீதமாக இருந்த வட் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப் பட்டுள்ளதாகவும், உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக இரண்டரை சதவீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாண் விற்பனை சுமார் ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போதைய நிலவரப்படி பாண் இறத்தல் ஒன்று 500 ரூபாய் வரை செல்லும் எனவும்,

ஏழைகளின் உணவாக இருந்த அப்பம் தற்போது ஆடம்பர மக்களின் உணவாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin