யாழ்.கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

யாழ்.கோப்பாய் பகுதியில் கடந்த 21ம் திகதி மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 21 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள் கொண்டிருந்த மேற்படி இளைஞன் கோப்பாய் பகுதிக்கு அண்மையாக வீதியின் வலதுபுறமாக திரும்ப முற்பட்டபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மத்தியூஸ் வீதியை சேர்ந்த றோபேட் அன்ரன் – தினுசன் (வயது-21) என்ற இளைஞனே படுகாயமடைந்திருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றதாக கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin