பெருந்தொகை தங்கத்துடன் நால்வர் கைது!

நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கொண்டுவர முயன்ற 04 விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 17 கோடி ரூபா பெறுமதியான 08 கிலோ 500 கிராம்... Read more »

காரைநகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த இளைஞர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை!

காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த குற்றம் சாட்டில் 09 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று தண்டப்பணம் விதித்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க உத்தவிட்டுள்ளது. ஸ்பெயின்... Read more »

வடலியடைப்பில் வீடுகள்,கடை உடைத்து திருடிய சந்தேக நபர் ஒருவர் கைது !

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடலியடைப்பு பகுதியில் இம்மாதம் இரண்டு வீடுகள் உடைத்து திருடியமை மற்றும் ஒரு கடை உடைத்து திருடியமை போன்றவற்றுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்படும் வேளையில் அவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைவஸ்து,... Read more »

கிளிநொச்சியில் புதிதாக அமையவுள்ள மதுபாண நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பு

புதிதாக அமையவுள்ள மதுபான நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில், புதிதாக மதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 30.09.2022 பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில்,... Read more »

இளையோரின் ஆக்கங்களை பகிரும் வட்டமேசை கலந்துரையாடல்..!

விழுதுகள் ஆற்றல் மையத்தின் ஏற்பாட்டில் இளையோரின் ஆக்கங்களை பகிரும் வட்டமேசை கலந்துரையாடல்   தினம் வெள்ளிக்கிழமை யாழிலில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்று. குறித்த வட்ட மேசைக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சார்ந்து விழுதுகள் அமைப்பின் இளையோரினால் சமூகத்தில் புரையோடி... Read more »

பாரம்பரிய சிறகுவலை தொழில் இடத்தில் கடலட்டை பண்ணை, மக்கள் எதிர்ப்பு,உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதிப்பு.பூநகரியில் சம்பவம்…!

பூநகரி – கிராஞ்சி இலவன்குடா கடற்பகுதியில் பாரம்பரியமாக சிறகுவலை தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் அப்பகுதியில் கடலட்டை  பண்ணை அமைக்கப்படுவதற்க்க்கு எதிர்ப்பு தெரிவித்து  நேற்றுக் காலைமுதல் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. குறித்த  இலவன்குடா கடற்பரப்பில் பெண்... Read more »

போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை மீதான விசாரணை நிறைவு!

ஜூன் 9ஆம் திகதி போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை மீதான விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையை கூடிய விரைவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணைகளின்போது ஜனாதிபதி மாளிகையின் கட்டமைப்பு, அங்கு வைக்கப்பட்டுள்ள வரலாற்று தொல்பொருட்கள் மற்றும்... Read more »

யாழில் காலாவதியான பொருட்கள் விற்பனை: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 11 வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் 20, 21ஆம் திகதிகளில் யாழ்.மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மாநகர சபைக்கு உட்பட்ட பலசரக்கு கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது வண்ணார்பண்ணை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில்... Read more »

வீழ்ச்சியடையும் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிரான ரூபாயின் மதிப்பு! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் திப்பு மாறாமல் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை... Read more »

தமிழர்களின் இருப்பினை தக்கவைக்க அரசியல் உரிமை வேண்டும்!

ஒட்டுசுட்டானில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இயங்கிவரும் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பதாதைகளை தாங்கியவாறு தங்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள். பின்தங்கிய மாவட்டமான முல்லைத்தீவு மாவட்டத்தில்... Read more »