வடலியடைப்பில் வீடுகள்,கடை உடைத்து திருடிய சந்தேக நபர் ஒருவர் கைது !

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடலியடைப்பு பகுதியில் இம்மாதம் இரண்டு வீடுகள் உடைத்து திருடியமை மற்றும் ஒரு கடை உடைத்து திருடியமை போன்றவற்றுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்படும் வேளையில் அவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைவஸ்து, 55 ஆயிரம் ரூபா காசு மற்றும் திருடப்பட்ட பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இளவாலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin