கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ, வலகும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. டிப்பர் ரக வாகனமும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே தாயும், மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பொரலஸ்கமுவ... Read more »
வரிச் செலுத்துகையின் அடிப்படையிலான ஓய்வூதிய முறைமையொன்று அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சமூகப் பாதுகாப்பு சபையின் ஊடாக முயற்சியான்மையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. உற்பத்தியாளர்கள் மற்றும் முயற்சியான்மையாளர்களுக்கு எவ்வித ஓய்வூதிய திட்டங்களும் கிடையாது என இராஜாங்க அமைச்சர் அனுபம... Read more »
ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் உள்ள அரச உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்புவதற்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது புலமைப்பரிசில்களை அதிகரிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வந்ததாகவும் அமைச்சர்... Read more »
வெளிநாடுகளுக்கு செல்லும் போது சொத்துக்களாகக் காட்ட தங்க மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெறுவது வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்கத்தின் விலை தற்போது உயர்ந்துள்ளமையே இதற்கு பிரதான காரணமாகும் என இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க... Read more »
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்கப் போட்டியில் 10 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தங்கப் பதக்கத்தை கொழும்பு விட்சர்லி சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ஓஷினி தேவிந்தய குணவர்தன வென்றார். 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 30 போட்டியாளர்களில், நடைபெற்ற ஒன்பது சுற்றுகளில் 8.5 புள்ளிகளைப் பெற்று... Read more »
இந்தோனேசியாவில் திரவ இருமல் மருந்துகளை உட்கொண்ட 100 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியான சம்பவம் உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில்,மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் உயிரிழந்த 66... Read more »
வவுனியா மாவட்டத்தில் பைக்கற்றில் அடைக்கப்பட்ட கோதுமை மாவினை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ள நிலையில் அதன் விலை 400 ரூபாவாக காணப்படுவதாக துகர்வோர் தெரிவிக்கின்றனர். கோதுமை மாவின் விலை 265 ரூபாவிற்க விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் மாத்திரம் தனியார் வர்த்தக... Read more »
இலங்கையில் இணைய சுதந்திரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2021ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலப் பகுதி தொடர்பில் ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனநாயக கண்காணிப்பு சுதந்திர அமைப்பு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பின்வரும்... Read more »
மக்கள், அரசியல் அமைப்பில் திருத்தங்கள் கோரவில்லை எனவும் மாறாக முழுமையான மாற்றத்தையே கோருவதாகவும தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள், அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க வேண்டாம் எனவும் முறைமை மாற்றத்தையே கோருகின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் 9971 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 784 கர்ப்பிணிகளும், 576 ஐந்து வயதிக்குட்பட்ட சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிராமிய பொருளாதார புத்தெழுச்சி மையங்களை வலுவூட்டும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழான மாவட்ட மட்ட கலந்துரையாடல் மாவட்ட... Read more »