அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்..! வெளியான தகவல்

மாகாண சபைகளில் அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கு மாதந்தோறும் 25 ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பதுடன், 24ஆம் திகதி சம்பளம் வங்கியில் வைப்பிலிடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு 24 ஆம் திகதி தீபாவளி... Read more »

மரம்மான முறையில் விடுதியில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு..!

பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மரம்மான முறையில் உயிரிழந்துள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்று வந்த பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய மாணவனே நேற்று (21-10-2022) காலை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் சப்ரகமுவ... Read more »

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி எதிர்வரும் நான்காம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.... Read more »

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் – சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பாதிப்பு

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் தங்க சந்தையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் இந்த காலப்பகுதியில் தங்கம் விலை உயரும் காலப்பகுதி என்றாலும் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உலக... Read more »

இலங்கையில் நீக்கப்படுகிறது இறக்குமதி தடை! நாட்டு மக்களுக்கு வெளியாகிய அறிவித்தல்

இலங்கையில் இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ள சில பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அழகுசாதன பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி... Read more »

2022 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை திகதிகள் தொடர்பான அறிவிப்பு!

2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், க.பொ.த. உயர்தரப் பரீட்சையை அடுத்த... Read more »

மீண்டும் விலைகுறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள்! வெளியான தகவல்

கொழும்பு – புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலை குறைவடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, கடந்த வாரம் 400 ரூபாவாக நிலவிய ஒரு கிலோகிராம் பருப்பின் விலை, 25 ரூபாவால் குறைக்கப்பட்டு, 375 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 250... Read more »

வெலிகடை சிறையில் இருந்த இரண்டு கைதிகள் தப்பியோட்டம்!

வெலிகடை சிறைச்சாலையின் இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 19 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகளின் வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதே இருவரும் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்பாவல தம்புத்தேகம மற்றும் அனுராதபுரம் கல்குளம பிரதேசத்தை... Read more »

நாடளாவிய ரீதியாக தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை..! வெளியாகிய அறிவித்தல்

தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான செவ்வாய்க்கிழமை மாணவர்களின்... Read more »

கொழும்பில் அப்பாவி பொது மக்களை சுட்டுக் கொலைசெய்த பொலிஸார்

முல்லேரியா மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் காரணமல்லாமல் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல எனவும் பொலிஸ் விசாரணைக் குழுக்கள்... Read more »