யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி 2024….!

யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி 2024 பாடசாலை பதில் அதிபர் திருமதி பாணுமதி தலமையில் இன்று பிற்பகல் 1:45 மணியளவில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து பாடசாலை மைதானம் வரை  மலர்... Read more »

வெடுக்குநாறி மலை அநீதிக்கு எதிராக நாளை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு!

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட அநீதிக்கு எதிராக நாளையதினம் காலை 10 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக வட- கிழக்கு மக்களை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்புவிடுத்துள்ளார். கடந்த மகாசிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலையில்  வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயத்தின்... Read more »

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி வெளிநாட்டு பிரஜை பலி!

பொத்துவில் சங்கமன்கந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வெளிநாட்டு பிரஜை இன்று (15) காலை சங்கமன்கந்த மணச்சேனி காட்டுப் பகுதியில் காட்டு யானைகளால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் 50 வயதுடைய இத்தாலியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில்... Read more »

மேர்வின் சில்வாவின் மகன் பிணையில் விடுதலை…!

மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து, பணம் கோரிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் தலங்கம பொலிஸாரால் நேற்று (11) கைது செய்யப்பட்டார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வர்த்தகர் ஒருவரிடம்... Read more »

நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது.

நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. அந்தவகையில், இந்த மாதத்தின் கடந்த 10 நாள்களில் மாத்திரம் 67 ஆயிரத்து 114 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ரஷ்யாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின்... Read more »

திருகோணமலை-திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை-திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றையதினம்(14) இரவு 7.00 மணியளவில்  இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில்  உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் மருந்து கொடுக்கும் பகுதி மாத்திரமே சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காலை 8 மணி முதல் ... Read more »

இறால் பண்ணையாளர்களுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி ஒதுக்கீடு…!

கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு செய்தார். இந்நிலையில் பயனாளிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம்(14) மண்முனை தென்மேற்கு... Read more »

எமக்கு வேறு வழியில்லை…! தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ள யாழ் கடற்றொழிலாளர்கள்…!

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இந்திய மீனவர்களின் இழுவை மடிப்படகுகளை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகம் முன் மீனவ சங்கங்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தில் நேற்றைய தினம்(14) ... Read more »

15 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேன்துறை கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. இவர்கள் தமிழ்நாடு மாநிலம் நாகைப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம்... Read more »

அம்பனில் இன்று இரத்ததான முகாம்

யாழ் போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு அண்மை நாட்களாக நிலவி வரும் சூழலில் வடமராட்சி அம்பன் பகுதியில் இரத்ததான முகாம் ஒன்று இன்று(15) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்”என்ற தொனிப் பொருளில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் கிளை மருதங்கேணி பிரிவினரால்... Read more »