இறால் பண்ணையாளர்களுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி ஒதுக்கீடு…!

கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு செய்தார்.

இந்நிலையில் பயனாளிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம்(14) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில்  இடம்பெற்றது.

இதன்போது பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் கிழக்கு ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews