திருகோணமலை-திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை-திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றையதினம்(14) இரவு 7.00 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில்  உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் மருந்து கொடுக்கும் பகுதி மாத்திரமே சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காலை 8 மணி முதல்  மாலை 4 மணி வரை மாத்திரமே மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தாக்குதல் இடம்பெற்ற வேளை வைத்தியசாலையில் காவலாளிகள் எவரும் இருக்கவில்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும்  கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews