அம்பனில் இன்று இரத்ததான முகாம்

யாழ் போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு அண்மை நாட்களாக நிலவி வரும் சூழலில் வடமராட்சி அம்பன் பகுதியில் இரத்ததான முகாம் ஒன்று இன்று(15) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்”என்ற தொனிப் பொருளில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் கிளை மருதங்கேணி பிரிவினரால் இன்று காலை(15) 09.00மணிக்கு குறித்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நடைபெறும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு தங்களது குருதி கொடையை நல்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews