பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக்கோரும் கையெழுத்து போராட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்தது. குறித்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது நேற்று காலை 11 மணி முதல் பிற்பல் 1... Read more »
தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைதாகி 12 வருடங்கள் சிறையிலிருந்த தமிழ் அரசயல் கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – விக்கிணேஸ்வரா கல்லூரி வீதி கரவெட்டியைச் சேர்ந்த கந்தப்பு ராஜசேகரே என்பவரே கொழும்பு நீதிவான் நீதிமன்றின் நீதிபதி சந்திமல் லியனகேயினால்... Read more »
ஆள்மாறாட்டம் செய்து க.பொ.த உயர்தர பரீட்சை எழுத வந்திருந்த தேரர் ஒருவர் போலி தேசிய அடையாள அட்டையுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கொக்மாதுவ – வெலிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தொியவருவதாவது, புத்தளம் சாந்த மரியா தமிழ் வித்தியத்திலுள்ள பரீட்சை... Read more »
வவுனியா – அனுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி தொடக்கம் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது. ரயில்வே பொது முகாமையாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தண்டவாளங்களில் திருத்தம் மேற்கொள்ள உள்ளதால் இவ்வாறு 5 மாதங்களுக்கு புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
யாழ்.வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின் தேர் திருவிழா நேற்று நடைபெற்றிருந்தது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டிருந்த 5 பக்தர்களிடம் தங்க சங்கிலிகள் களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. களவாடப்பட்ட சங்கிலிகள் 81/2 பவுண் நிறையுடையவை என கூறியிருக்கும் பொலிஸார் விசாரணைகளை... Read more »
மீசாலை கிழக்கை சேர்ந்த 21 வயதான இளைஞருக்கும், சரசாலை பகுதியை சேர்ந்த 34 வயதான இளைஞருக்குமே இவ்வாறு இரு தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர காய்ச்சல் காரணமாக சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் பெறுபேறுகளில் இருவருக்கும்... Read more »
ஐ.நா ஆணையாளருடைய அறிக்கையில் இலங்கை தொடர்பான விடயம் இம்முறை இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஐ.நா ஆணையாளரின் அறிக்கை... Read more »
மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட, அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில், உயர் தரப் பரீட்சையின் போது, மாணவர் ஒருவர், கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற கணித பாட பரீட்சையின் போது, மாணவர் ஒருவர், பரீட்சை மண்டபத்திற்குள் கையடக்கத் தொலைபேசியை... Read more »
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 40, 000 மெற்றிக் டன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதன்போது,... Read more »
நாட்டு மக்களுக்கு மின்சாரத்தையும் எரிவாயுவையும் பெற்றுக்கொடுக்க முடியாத அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய... Read more »