மீசாலை மற்றும் சரசாலை பகுதிகளில் இருவருக்கு ஒரே நேரத்தில் கொரோனா மற்றும் டெங்கு தொற்று.. |

மீசாலை கிழக்கை சேர்ந்த 21 வயதான இளைஞருக்கும், சரசாலை பகுதியை சேர்ந்த 34 வயதான இளைஞருக்குமே இவ்வாறு இரு தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தீவிர காய்ச்சல் காரணமாக சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதன் பெறுபேறுகளில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews