மட்டு.கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் சித்தி…!

இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் 88 வீதமானமாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர்.செல்வராஜா தெரிவித்துள்ளார். கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் நான்கு மாணவர்கள் பெற்று சித்தியடைந்துள்ளனர். இதில் உ.ஜீரோமி -155 புள்ளிகள்,... Read more »

கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் வீட்டுத்தோட்ட உபகரணங்கள் வழங்கல்..!

கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சிறந்த முறையில் வீட்டுத்தோட்ட செய்கையில் ஈடுபடும் தெரிவு செய்யப்பட்ட பெண் பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வழிகாட்டலில் தேவ மகிமை உதவிடும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தில் வீட்டுத்தோட்டச் செய்கையில் ஆர்வமுடன்... Read more »

யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் மீளாய்வு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வு கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைதலைவர் அங்கஜன் ராமநாதன் அவர்களின் தலைமையில் துறைசார் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் மீளாய்வு கூட்டம் இடம்பெற்றது.யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய... Read more »

குறிகட்டுவான் இறங்குதுறை யாருக்கு சொந்தம்?யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுவின் மீளாய்வு கூட்டத்தில் குழப்பம்.

யாழ்ப்பாணம் -தீவகம் பிரதான வீதி மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறை புனரமைக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வு குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டதை யடுத்து குறித்த இறங்குதுறையானது வீதி போக்குவரத்து அதிகாரசபைக்கு சொந்தமானதா அல்லது வீதி அபிவிருத்தி... Read more »

ஏதாவது அபாயம் நிகழும் இடத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரே பொறுப்பேற்க வேண்டும்…!

குறிகட்டுவான் நெடுந்தீவு போக்குவரத்தில் பொது மக்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழுமாக இருந்தால் அதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினரே பொறுப்பெடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் தெரிவித்துள்ளார் இன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் குழுக் கூட்டம் இடம்பெற்றபோது... Read more »

இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிகாரி மீது யாழ் ஒருங்கிணைப்பு குழு இணைதலைவர் பாய்ச்சல்!

காரைநகர் மருதபுரம் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை எனவும் அதனை சேவையில் ஈடுபடுத்துமாறு ஏற்கனவே கடந்த காலங்களில் இடம்பெற்ற மீளாய்வுக் குழுக் கூட்டங்களில் இலங்கை போக்குவரத்து சபைக்கு தெரியப்படுத்திய போதிலும் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்தாதன் காரணமாக ஆத்திரமடைந்த யாழ்ப்பாண மாவட்ட... Read more »

எதிர்க் கட்சியின் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பு ஸ்தம்பிதம்!

அரசாங்கத்தின் தூர நோக்கற்ற சிந்தனை மற்றும் கொள்கைகளால் நாடு பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக தெரிவித்து பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்த பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பில் இன்று (15) நடைபெற்றது. ‘முழு நாடும் அழிவில்: பொறுத்தது போதும்,... Read more »

அமைச்சருக்கான வாகனம் மற்றும் வீடு ஆகியவற்றை செயலாளரிடம் ஒப்படைத்த வாசுதேவ நாணக்கார..!

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணக்கார தனது உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் வீடு ஆகியவற்றை அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோது, தனது குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவரிடமிருந்து சிறிய காரொன்றை பெற்றுள்ளதாகவும், அதனையே தொடர்ந்து பயன்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார... Read more »

சத்துணவை உட்கொண்ட 09 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலையில் வழங்கப்பட்ட சத்துணவை உட்கொண்ட 9 மாணவர்கள் வாந்தி எடுத்துள்ளதுடன் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.  குறித்த சம்பவம் மட்டக்களப்பு – வடமுனை ஊத்துச்சேனை வீரநகர் அ.த.க பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சின் மதியபோசன உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இங்கு... Read more »

10 வருடங்களுக்கும் மேலாக இடமாற்றம் இல்லாமல் 132 ஆசிரியர்கள் யாழ்.வலயத்தில் மட்டும்! கண்டுகொள்ளப்படுமா? |

யாழ்.கல்வி வலயத்தில் 132 ஆசிரியர்கள் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக இடமாற்றம் எதுவுமில்லாமல் ஒரே பாடசாலைகளில் கற்பித்துக் கொண்டிருக்கின்றமை தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  வடமாகாண கல்வி அமைச்சின் பலவருடங்களாக ஆசிரியர் இடமாற்றம் முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை. என பல தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில், யாழ்... Read more »