மட்டு.கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் சித்தி…!

இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் 88 வீதமானமாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர்.செல்வராஜா தெரிவித்துள்ளார்.

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் நான்கு மாணவர்கள் பெற்று சித்தியடைந்துள்ளனர். இதில் உ.ஜீரோமி -155 புள்ளிகள், ஹேதாஜினி ஹோவித்தியா– 155 புள்ளிகள், வினுக்ஷன்-152 புள்ளிகள், அக்ஷகா-148 புள்ளிகள் பெற்றுசித்தியடைந்துள்ளனர்.

மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் வித்தியாலய அதிபர் க.செல்வராஜா, பிரதி அதிபர்களான ஆர்.சண்முகநாதன், பி.இராதாகிருஸ்ணன், ஆரம்பபிரிவுதலைவர் என்.புனிதகுமார்,ஆசிரியை எஸ்.சிறிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: admin