அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா.

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விலகியை அடுத்து அமைச்சரவையின் அதிகாரங்கள் இழக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. Read more »

இதுவரை 140 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி.!

காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இதுவரையில் சுமார் 140 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில்  இவ்வாறு... Read more »

அனுமதி இன்றி அரச காட்டுக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இருவர் கைது.

இராமநாதபுரம்பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் சுடலை குளம் பகுதியில் 08.05.2022 அன்றையதினம் சட்டவிரோதமான முறையில் அரச காட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்த இருவர் அங்கு நின்ற பத்துக்கும் மேற்பட்ட கருங்காலி மரத்தினை வெட்டிய குற்றச்சாட்டில் இராமநாதபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும்இன்றைய தினம்... Read more »

தென்னிலங்கை சம்பவத்தை கண்டித்து யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் போராட்டம்…!

தென்னிலங்கை சம்பவத்தை கண்டித்து யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 5.15 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் A9 வீதிவரை முன்னெடுக்கப்பட்டது. Read more »

கொழும்பில் மகிந்த ஆதரவாளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது தாக்குதல்!

கொழும்பு – கொம்பனி வீதியில் பயணிகள் பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்  செய்திகள்  தெரிவிக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் மகிந்த ஆதரவாளரொருவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும்... Read more »

தாக்குதலை கண்டித்து தபால் சேவையாளர்கள் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிப்பு –

கோட்டா கோ கம, மைனா கோ கம பகுதிகளில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தபால் சேவையாளர்கள் தற்போது முதல் தொடர்ச்சியான பணிப்பகிஷ;கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்தள்ளனர். Read more »

மைனா கோ கம, கோட்டா கோ கம களவரத்தின் போது காயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி –

மைனா கோ கம, கோட்டா கோ கமவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த 15 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பொலிஸாரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது Read more »

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் பேரவௌ ஆற்றில் குதிப்பு –

கோட்டா கோ கம, மைனா கோ கமவில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள், பேரவௌ ஆற்றில் குதித்த காட்சிகள் சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அத்துடன் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களால் குப்பைவண்டியில்... Read more »

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்…!

கொழும்பு அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டே சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. Read more »

காலி முகத்திடலை நோக்கி செல்லும் ஆர்ப்பாட்டப் பேரணிகள்!

அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு வலியுறுத்தி கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தரப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிகள் கொழும்பு காலிமுகத்திடலை நோக்கி வந்துக்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை தடுப்பதற்கான முயற்சியில் பாதுகாப்பு தரப்பினரும் முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை. Read more »