உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது எமக்கு தெரியும்..! – மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று  கண்டியில் இதனைக் தெரிவித்தார் இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் எங்கு... Read more »

இந்திய சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள்…!

படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்திய கடற்பரப்பில் கரையொதுங்கிய இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வருடம் தலைமன்னார் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற தலைமன்னார் கிராமம் பகுதியை சேர்ந்த இரு... Read more »

கோப் குழுவிலிருந்து பதவி விலகப் போவதில்லை! ரோஹித்த

கோப் குழுவின் தலைமைப் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கம் அண்மையில் கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தனவை நியமித்தது. இந்த நியமனத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு குழுவின் உறுப்பினர்கள் பலர் பதவி விலகியுள்ளனர். இவ்வாறான ஓர் பின்னணியிலும்... Read more »

கனடாவை சென்றடைந்த அநுரவிற்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு…!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்றையதினம்(21) கனடாவுக்கு விஜயம் செய்தார். நாளை மற்றும் நாளைமறுதினம் (23, 24)  கனடாவின் ரொறொன்ரோ மற்றும் வான்கூவரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அநுர கனடா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவிற்கு... Read more »

சிவராத்திரியை பகலில் நடத்துமாறு கூறும் பொலிஸ்; பொசன் பண்டிகையை பகலில் கொண்டாட முடியுமா? – சார்ள்ஸ் எம்.பி.

இந்துக்களின் சிவராத்திரியை பகலில் நடத்துமாறு பொலிஸார்  கூறுவதை போன்று பௌத்தர்களின் பொசன் தின நிகழ்வை பகலில் நடத்துமாறு பொலிஸாரினால் கூற முடியுமா என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில்  நேற்று   உரையாற்றும் போது மேற்கண்டவாறு அவர்... Read more »

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் இந்திய தரப்புடன் பேச்சுவார்த்தை…! அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை…!

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றையதினம்(21)  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

இணக்கப்பாடின்றி நிறைவடைந்த ரணில் – பசில் பேச்சுவார்த்தை..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவருக்கும் இடையில் நேற்றைய தினம் மாலை பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையும் எவ்வித இறுதி இணக்கப்பாடுகள் இன்றி நிறைவடைந்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.... Read more »

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில் இன்று மாலை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதன்படி... Read more »

அனுர குமார திசாநாயக்க புரிந்து கொள்ள வேண்டிய ஈழத் தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு..!!

இலங்கையின் 76 வருட  தொடர் ஏமாற்று அரசியலின்  புதிய முகமான அனுர குமார திசாநாயக்க புரிந்து கொள்ள வேண்டியது  ஈழத் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டையே என தமிழ் தேசிய மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகம் நேசன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர்... Read more »

சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் –  சபாநாயகரால் அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் என்பதுடன்  சபாநாயகரால் அல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் நாட்டில் நிலவும்... Read more »