மண்ணெண்ணெய் விநியோகம் இல்லை: வரிசையில் பொதுமக்கள்.

நாட்டில் தினமும் பொது மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு மற்றும் அயற்பிரதேசங்களில் கடந்த ஒரு வாரகாலமாக மண்ணெண்ணெய்க்காக பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர். கொழும்பில் தொடர்மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் எரிவாயு விநியோகம் இல்லாத நிலையில்... Read more »

மல்லாவியில் இளம் குடும்பஸ்தர் வெட்டி படுகொலை.

முல்லைத்தீவு -மல்லாவி, பாலிநகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பிய வேளையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

தமிழர் பகுதியில் புத்தர் சிலை! தமிழ் மக்களின் எதிர்ப்பால் பௌத்த தேரர்களின் முயற்சி நிறுத்தம்.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் நேற்றையதினம் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்கு பௌத்த தேரர்கள் முயற்சித்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளையும் மீறி, இராணுவத்தினரின் பூரண... Read more »

எரிபொருள் கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

எரிபொருள் கொள்வனவு செய்வோருக்காக எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி தொடக்கம் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாடிக்கையாளர்களை பதிவு செய்து, வாராந்தம் உத்தரவாத அடிப்படையில் எரிபொருள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

பரந்தனில் புதிதாக புனரமைக்கப்பட்ட அந்தோனியார் ஆலயம் பிரதிஸ்டை.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புதிதாக புனரமைப்புச் செய்யப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் யாழ் மறைமாவட்ட ஆயரினால் நேற்று முன்தினம்  (11-06-2022) மாலை பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயம் 1976 ஆம் ஆண்டு... Read more »

யாழில் பாவனையாளர் அதிகாரசபையினரால் பரிசோதனை  நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் மற்றும் பொலிசாரும் இணைந்து ஞாயிற்றுகிழமை யாகிய இன்றைய தினம் பல்பொருள் அங்காடி ,மொத்த வியாபார நிறுவனங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது மேலும், தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் பரிசோதனை, கண்காணிப்பு... Read more »

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 2017,18 ஆம் ஆண்டிற்கான இதழியல் டிப்ளோமா பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தலைமையில்... Read more »

மட்டு.காத்தான்குடி டீன் வீதியை முழுமையாக செப்பனிட்டு தருமாறு மக்கள் கோரிக்கை.

மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியை முழுமையாக செப்பனிட்டு தருமாறு கோரி பொதுமக்கள் சிலர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் நேற்று ஈடுபட்டனர். காத்தான்குடியில் முக்கிய வீதி ஒன்றாகக் காணப்படும டீன் வீதி மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட நிலையில் இந்த வீதியை செப்பனிட அமைச்சர் நசீர்... Read more »

அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்.

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பூரணை திருக்குளிர்த்தி சடங்கின் அம்மன் வெளிவீதி உலா இன்று இடம்பெற்றது. நேற்று மாலை மருதடிமாணிக்கப்பிள்ளையாரின் தரிசனத்துடன் ஆரம்பமான அம்மன் ஆரம்பமான வெளிவீதி உலாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். வீதிகள் தோறும்... Read more »

கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியின் 6 ஆவது பட்டமளிப்பு விழா.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ள 6 ஆவது பட்டமளிப்பு விழா தொடர்பில் இன்று அரபுக்கல்லூரி வளாகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. அரபுக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் சங்க தலைவர் ஏ.எல் நாஸிர் கனி... Read more »