மட்டு.காத்தான்குடி டீன் வீதியை முழுமையாக செப்பனிட்டு தருமாறு மக்கள் கோரிக்கை.

மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியை முழுமையாக செப்பனிட்டு தருமாறு கோரி பொதுமக்கள் சிலர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் நேற்று ஈடுபட்டனர்.

காத்தான்குடியில் முக்கிய வீதி ஒன்றாகக் காணப்படும டீன் வீதி மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட நிலையில் இந்த வீதியை செப்பனிட அமைச்சர் நசீர் ஹாபிஸ் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த 10.07.2021 அன்று வீதி செப்பனிடுவதற்காக அமைச்சர் நசீர் ஹாபிஸ் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வீதி அபிவிருத்தி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் வீதியில் காபட் இடும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

காபட் இடும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதனால் வீதியில் இடையிடையே குழிகள் விழுந்துள்ளதுடன் சில இடங்களில் குன்றும் குழியுமாக காணப்படுவதால் டீன் வீதியினை காபட் இட்டு முழுமையாக அபிவிருத்தி செய்து தருமாறு பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews