எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றம்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை.

எதிர்காலத்தில் எரிபொருள் கிடைக்கப்பெற்றால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அபாய நிலை ஏற்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றிரவு டீசல் கப்பலொன்று நாட்டை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை... Read more »

முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு கூடுதல் அதிகாரம் – அமைச்சரவை அனுமதி.

முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரம் வழங்க நேற்று (15) கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கலவரக்காரர்களின் கைகளில் துப்பாக்கிகள் சிக்குவது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இராணுவத்தினரிடம் இருந்து திருடப்பட்ட துப்பாக்கிகளை விரைவில் மீட்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்... Read more »

இலங்கையில் பெட்ரோல் விலை 110 ரூபாவால் குறைக்க முடியும் – ஆனந்த பாலித.

உலக சந்தையில் எரிபொருளின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித இதனைத் தெரிவித்தார். உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் அரசாங்கம் முன்வைத்துள்ள... Read more »

மைத்தியை மீண்டும் ஜனாதிபதியாக்க கடும் முயற்சி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அடுத்த ஜனாதிபதியாக நியமிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று தற்போது மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நியமிக்க தயாராகி வருவதாக உள்ளக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில... Read more »

அடுத்த கிழமையும் மூடப்படும் பாடசாலைகள்! வெளியானது அறிவிப்பு

அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளும் ஜூலை 18 முதல் 20 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தகவல் அறிவித்துள்ளது. மேலும், கல்வி அமைச்சு வெளியிட்ட தகவலின் படி, ஜூலை 21ஆம் திகதி புதிய தவணை தொடங்கும் என தெரியவருகிறது. ... Read more »

ரணில் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்:லஹிரு வீரசேகர

ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக கூட நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்ததை போராட்டகாரர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க பதவி... Read more »

பதில் ஜனாதிபதியாக ரணில் பதவிப்பிரமாணம்

ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  இந்த விடயத்தை பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன இன்று காலை... Read more »

புதிய அரசாங்கமொன்றை அமைக்கும் சந்தர்ப்பம் மக்கள் கையில்: அனுரகுமார திஸாநாயக்க

புதிய அரசாங்கமொன்றை அமைக்கும் சந்தர்ப்பம் மக்களிடம் வழங்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். விரைவில் இந்த சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென சமூக ஊடகங்களின் வாயிலாக அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கத் தவறினால் நாடாளுமன்றிற்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்... Read more »

நாட்டின் நெருக்கடி தீர்க்க முடியாத பிரச்சினையல்ல: சரத் பொன்சேகா

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் யோசனை முன்வைத்தால், ஜனாதிபதி பதவியை ஏற்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி... Read more »

கனடாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கோவிட் பரிசோதனை கட்டாயம்: கனேடிய அரசாங்கம்

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கனடா வருபவர்களுக்கு கோவிட் பரிசோதனை செய்யும் நடைமுறையை மீண்டும் கட்டாயமாக தொடங்க உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து கனடா வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கோவிட் பரிசோதனை என்ற நடைமுறை கடந்த ஜூன் 11ம் திகதி ரத்து செய்யப்பட்டது.... Read more »