சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மீட்பு…!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமான முறையில், இறக்குமதி செய்வதற்கு தடைசெய்யப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கடத்தப்படுவது தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. 36 பாரிய மூட்டைகளில் மறைத்து... Read more »

நள்ளிரவில் அநாமதேய தொலைபேசி அழைப்பு. தமிழ்நாட்டில் மத்திய, மாநில உளவுத்துறை தீவிர சோதனை.

ராமேஸ்வரம் செப் 08, ஈழத்தமிழர்கள்   15 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி சென்று  இறங்கி  தனுஷ்கோடி புதிய பாலம் அருகே நிற்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம. நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி குறித்த தகவலை கூறியுள்ளார். இதனால் உசாரடைந்த... Read more »

மயக்க மருந்து கொடுத்து  மோதிரத்தை ஆட்டைய போட்ட நூதன திருடர்கள், வடமராட்சியில் சம்பவம்…..!

மயக்க மருந்து கொடுத்து அவர் மயங்கிய பின் மோதிரத்தை ஆட்டையப் போட்ட சம்பவம் ஒன்று நேற்று   முன்தினம் (06.09.2022) வடமராட்சியில்மந்திகை பகுதியில்  பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. நேற்று முன்தினம்  பிற்பகல்  2.00 மணியளவில் வல்லிபுர கோவில் செல்வதற்கென கூறி  வாடகை ... Read more »

மாகாண சபையின் விலை மதிப்பீடு இதுவரை கிடைக்காமையால் உள்ளூராட்சி மன்றங்களின் பல வேலைகள் முடக்கம்…,! பருத்தித்தறை தவிசாளர் அ.ச.அரியகுமார்.

உள்ளூராட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய பல வேலைகள் இருக்கின்றன.  ஆனால் அவற்றை செய்வதற்கான விலை மதிப்பீட்டை  மாகாண சபை இதுவரை கிடைக்கப் பெறாமையால்  வேலைகளைச் செய்ய முடியாமல் இருப்பதாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.ச.அரியகுமார் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்  வடமராட்சி பருத்தித்துறை பிரதேச... Read more »

தம்மை விடுதலை செய்யுமாறு கோரி 12 அரசியல் கைதிகள் மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று(06) ஆரம்பித்துள்ளனர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2019,2020 ஆகிய காலப்பகுதிகளின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களே... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில்  கடற்படையினரால் ஒரு தொகை கஞ்சா மீட்பு.

பளை பொலீஸ் பிரிவிற்க்கு உட்பட்ட கிளாலி பகுதியில் நேற்று முன் தினம்  (05) இரவு 37.700கிராம் கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படைக்கு கிடைத்ய இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது இடம் பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவும்  பளை... Read more »

கைக்குண்டுடன் ஒருவர் கைது….!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில்  நேற்றைய தினம் 06.09.2022 கைக் குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று காலை தருமபுரம் பொலிசாருக்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைய... Read more »

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நெல்லியடி பொலீஸ் நிலையத்தில்  இரத்ததான முகாம்……!   

யாழ்  மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நெல்லியடி பொலீஸ் நிலையத்தில்  நேற்றைய தினம் இரத்ததான முகாம் ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. இருந்தது குறித்த இரத்த தான முகாம் நெல்லியடி பொலிஸ் நிலைய விடுதியில் இலங்கை செஞ்சிலுவை சங்க  கரவெட்டி கிளை தலைவர் ஆர் ரகுபரன்... Read more »

நாகம்மாள் விவசாய சம்மேளனத்தின் பெரும் போக  நெற் செய்கை தொடர்பாான  கூட்டம்……!

நாகம்மாள் விவசாய சம்மேளனத்தின் பெரும் போக  நெற் செய்கை தொடர்பாான  கூட்டம் அதன் செயலாளர்  க.காாண்டீபன் தலமையில் இடம்  நேற்று முன்தினம் காலை  11.00 மணியளவில் இடம் பெற்றது. மூதூர் கிழக்கில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் மழைநீரை மட்டும் நம்பி காலபோக செய்கையில் ஈடுபடும் காயன்கேணிக்குளம்.  வேலப்பெருமாள்... Read more »

சிங்கப்பூர் மாநாட்டில் வடக்கு ஆளுநர்.

சிங்கப்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான நம்பிக்கையான அடையாளங்கள், ஒருங்கிணைந்த சமூகங்கள்”, வருடாந்திர மாநாட்டில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இலங்கை சார்பில் கலந்து கொண்டார். குறித்த மாநாட்டில்  சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்  சிறப்புரை ஆற்றினார். Read more »