நெடுந்தீவு மக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் !

மாபெரும் நெடுந்தீவு மக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் இன்று(24) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு மாவிலி துறைமுகத்திலிருந்து, நெடுந்தீவு பிரதேசசெயலகம், நெடுந்தீவு காவல் நிலையம் வரை, இடம்பெற்றது ஊர்வலத்தின் முடிவில் பிரதேசசெயலாளர், நெடுந்தீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது. நெடுந்தீவு மாவிலிதுறைக்கு முன்பாக... Read more »

வடக்கில் பனை வளம் அழிக்கப்படுவதை தடுக்க விசேட வேலைத் திட்டம்! தென்னை பயிற்செய்கை சபை

வடக்கு மாகாணத்தில் பனை வளம்  அழிக்கப்படுவதை தடுக்க விசேட வேலை திட்டம் ஒன்று பனை  அபிவிருத்திசபையும் தென்னை பயிற்செய்கைசபையும் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தென்னை பயிற்செய்கைசபையின் யாழ் பிராந்திய முகாமையாளர் தே,வைகுந்தன் தெரிவித்தார். இன்று யாழில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்வட மாகாணத்தில்... Read more »

சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பூரண ஆதரவு….! இயக்குநர் சி.அ. யோதிலிங்கம்

தமிழர்களுடைய தொல்பொருள் சின்னங்கள், ஆலயங்கள்  அழிப்புக்கு எதிராகவும், பயங்கரவாத எதிர்பு சட்டத்திற்க்கு  எதிராகவும் எதிர்வரும் 25 ம் திகதி அதாவது நாளை மறுதினம்  இடம்பெறும்  கதவடைப்பு போராட்டத்திற்கு சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பூரண ஆதரவு வழங்குவதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் நிறுவனரும்,... Read more »

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட வர்களின் உடலங்கள் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்படுகின்றன

நெடுந்தீவில் இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்ட ஐவரின் உடல்களையும் ஊர்காவற்துறை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதோடு இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டடுள்ளார். இதன் அடிப்படையில் உயிரிழந்த ஐவரின் உடலும் கடற்படையின் விசேட படகு மூலம் யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு... Read more »

யாழ்.வடமராட்சி கிழக்கில் மீண்டும் மணல் அகழ்வுக்கு அனுமதி!! தகவலறியும் உரிமைச் சட்டம் ஊடான கேள்வி தகவல் இருந்தும் இல்லை என பதில்……! ஊழல் என மக்கள் விசனம்

யாழ்.வடமராட்சி கிழக்கு மருங்தங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் 2023ம் ஆண்டு புதிய மணல் அகழ்வு அனுமதிகள் வழங்கப்பட்டமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. மருதங்கணி பிரதேச செயலகத்தில் கீழ் உள்ள பகுதிகளில் மணல் அகழ்வுகளை நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு முறைபாடுகளை தெரிவித்துவரும்... Read more »

பொது கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்க்கட்சிகள் அழைப்பு!

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன. இன்றைய தினம் தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ் விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவமயமாக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு... Read more »

நிதி சிக்கல்கள் காரணமாக விமானங்கள் சேவை நிறுத்தம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மறுப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது சில விமானங்கள் நிதி சிக்கல்கள் காரணமாக இயக்கமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை மறுத்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையை வெளியிட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், ஏ320 என்இஓ குடும்பத்தைச் சேர்ந்த 5 விமானங்கள் தற்போது புதிய இயந்திரங்களை பொருத்துவதற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளது. உலகளாவிய தொழில்துறையில்... Read more »

நெடுந்தீவில் சந்தேக நபர்களை கைது செய்ய கோரி நீதவானுக்கு முன்னால் போராட்டம்!

நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்துக்கு விஜயம் மேற்கொண்டு உடலங்களை பார்வையிட்டு நீதவான் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிய வேளைநெடுந்தீவு மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதோடு குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. Read more »

நெடுந்தீவு படுகொலை – சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்!

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நெடுந்தீவு இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில் தங்கியிருந்த ஐவர் இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் வெட்டுக்... Read more »

யாழ் மாவட்டத்தில்நீண்டகாலமாக மாடுகள் களவாடிய கும்பலின் முக்கிய நபர் கைது!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பகுதிகளில் மாடுகளை களவாடி இறைச்சியாக்கி விற்பனை செய்த கும்பலின் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். திருட்டுக் கும்பலிடம் இறைச்சியை வாங்கி விற்பனை செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறிய பொலிஸார், மேலும் நால்வர் தேடப்படுவதாகக்... Read more »