ஊர்காவற்துறை நீதவான் நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்திற்கு விஜயம்!

ஊர்காவற் துறை நீதவான் நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு சடலங்களை பார்வையிட்டுள்ளார் கடற்படையின் விசேட படத்தின் மூலம் ஊர்காவற்துறை நீதவான் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் விசேட பொலிஸ் அணியும் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. குறித்த பகுதியில் பொதுமக்கள் நடமாட தடை... Read more »

நெடுந்தீவில் 3 பெண்கள் உட்பட ஐவர் வெட்டிப் படுகொலை!

நெடுந்தீவில் 5 நபர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு கிராம சேவகரிடம் வினவிய போது, அவரும் சம்பவம் இடம்பெற்றது உண்மையென உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம்... Read more »

கனேடிய முதலீட்டாளர்களுக்கு உரிய பதிலை வழங்காமல் தாமதிக்கும் இலங்கை

நாட்டின் பொருளாதார மீட்சிக்கு தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கும் நோக்கில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பையேற்று, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் தலைமையிலான கனேடிய வர்த்தக பிரமுகர்கள் குழுவொன்று கடந்த வருடம் நவம்பர்... Read more »

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்! அச்சம் கொள்ள தேவையில்லை என்கிறார் விஜயதாச ராஜபக்ச

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்டது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனவே உத்தேச சட்டமூலத்தினால் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரவிக்கையில், இந்த வரைவில் உள்ள சில விதிகள் குறித்து... Read more »

உள்ளூர் துப்பாக்கி உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

தருமபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் உள்ளூர் துப்பாக்கி உற்பத்தியில் சிலர் ஈடுபடுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து தருமபுர பொலிசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து சட்ட விரோதமான முறையில் உள்ளூர் துப்பாக்கிகள் உற்பத்தியில் (இடியன்) ஈடுபட்டு வந்த சந்தேக... Read more »

வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : பொலிஸார் விசாரணை

நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்றீம் தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அக்கரப்பத்தனை, சின்ன நாகவத்தை தோட்டத்தை சேர்ந்த 68 வயதுடைய தாயொருவரே  நேற்று (21.04.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில்... Read more »

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தம்: பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் நேற்று (21.4.2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான... Read more »

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட குழந்தை இயேசு கோவில் – வற்றாப்பளை வீதியில்  இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்த 49 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான சந்தியா பரமேஸ்வரன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குழந்தையேசு கோவில் பத்திமாதா... Read more »

நல்லூர் விடுதிக்குள் நுழைந்து சாணி தண்ணி ஊற்றி தாக்குதல்…..! கணவன் மனைவி உள்ளிட்ட மூவர் கைது.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு விடுதி உரிமையாளர் மீது சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் நடத்தியமை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவன் மனைவி உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நல்லூர்... Read more »

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு கிளிநொச்சியிலும் அஞ்சலி…! (video)

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு கிளிநொச்சியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று மாலை 5 மணியளவில் கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்தில் மெழுகுவர்த்தியேந்தி அஞ்சலி செலுத்தினர். Read more »